Suriyan Peyarchi: கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி..எல்லையில்லாத அமோக பலன்களை, பெறும் ராசிகள் யார் தெரியுமா .?
Suriyan Peyarchi 2022 Palangal: செப்டம்பர் 17 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலிருந்து பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்..
Suriyan Peyarchi 2022:
சூரியன் பெயர்ச்சி பலன்:
கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆம், செப்டம்பர் 17 ஆம் தேதி, சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதையடுத்து, சூரிய பகவான் 16 அக்டோபர் 2022 வரை இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகள் இந்த நேரத்தில் சிறப்பான பலன்களை அடைவார்கள். அப்படியாக உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
Suriyan Peyarchi 2022:
மேஷம்:
சூரியன் சஞ்சாரம் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு தடைபட்ட வேலைகள் நிறைவடையும். இந்த காலகட்டத்தில் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் சில முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். துணையின் ஆரோக்கியம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம்.
மிதுனம்:
சூரியனின் ராசி மாற்றத்திற்குப் பிறகு, மிதுன ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் போதுமான வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கும். மேலும் படிக்க...Ketu Peyarchi 2022: கேதுவின் மாற்றத்தால் இன்னும் நான்கு மாதம்...சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..
தனுசு :
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி புதிய வாய்ப்புகளைத் தரும். வியாபாரிகளின் வியாபாரம் வேகம் பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். மன உளைச்சல் இருக்கலாம்.
Suriyan Peyarchi 2022:
கடகம்:
கடகம் ராசிக்காரர்களுக்கு சூரிய ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவுகள் இருக்கும். நீங்கள் நிதி தொடர்பான விஷயங்களில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.எனவே, இந்த காலகட்டத்தில் கவனமாக முடிவுகளை எடுங்கள்.