Pyramids: மர்மங்கள் நிறைத்த பிரமிடுகள் பற்றி தெரியுமா..? அவற்றின் வரலாற்று பின்னணி என்ன? ஓர் சிறப்பு தொகுப்பு
Pyramids: 'பிரமிடு' என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது நம்மை நடுங்கவைக்கும் ‘மம்மி’ திரைப்படம் ஆகும். எனவே, இத்தகைய சுவாரஸ்யம் கொண்ட 'பிரமிடு' களில் ஒளிந்துள்ள மர்மங்கள் அவற்றின் வரலாற்று பின்னணி என்ன என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Pyramids:
உலகின் பழமையான 7 அதிசயங்களில் ஒன்றான இந்த 'பிரமிடு' பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அசையாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புகளாக பிரமிடுகள் நிமிர்ந்து நிற்கிறது. இத்தகைய மர்மங்கள் நிறைத்த பிரமிடுகள் உருவான கதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் என்றால் இந்த பதிவு உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள், இந்த மம்மிக்கு 'மர்ம மனிதர்கள் ' என்று பெயரிட்டுள்ளனர்.
Pyramids:
பிரமிடு’ என்றதும் பலரும் நினைவில் கொள்வது, இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ‘மம்மி’ ஆகும். சுமார் கி.மு. 3500 க்கும் முன்னால், புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம். அங்கு பிரமிடுகளில், பூமியின் என மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. இது தவிர அங்கு பல்வேறு புதையல்கள் இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகிறது.
Pyramids:
இத்தகைய மர்மங்கள் நிறைத்த மம்மிக்களை வைச்சி நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, 1999 ல ஸ்டீஃபன் சம்மர்ஸால் எடுக்கப்பட்ட 'தி மம்ம' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆயிரம் வருஷங்களாக தூங்கிட்டி இருந்த மம்மிகளை எழுப்பிவிட்டு அது என்னென்ன அட்டுழியம்பன்னுதுங்குறது என்பது தான் 1999ல வெளிவந்த ''தி மம்மி'' திரைப்படம். திகில் நிறைந்த இந்த திரைப்படத்திற்கு உலக அளவில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
Pyramids:
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று ஆராச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவையாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இவைகள் மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா இவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்டியிருப்பார்கள்? என்ற கேள்விகள் மென்மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன.