Sevvai peyarchi 2022: அக்டோபர் 16ம் தேதி செவ்வாய் பெயர்ச்சி..யாருக்கு செல்வம் பெருகும்..? யாருக்கு பிரச்சனை?
Sevvai peyarchi 2022 Palangal: மிதுன ராசியில் அக்டோபர் 16ம் தேதி, நிகழும் செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மிதுன ராசியில் அக்டோபர் 16ம் தேதி, நிகழும் செவ்வாய் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், 4 ராசிகளுக்கு பொற்காலத்தை கொடுக்க இருக்கிறது. அவர்களுக்கு எங்கிருந்தோ திடீர் செல்வம் வர வாய்ப்பு உள்ளது. மேலும், குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களுக்குசெவ்வாயின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலம் வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய வருமானங்கள் உருவாகும், வியாபாரத்தைப் பெருக்க முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். வீட்டில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் படிக்க..Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால்..இந்த மூன்று ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு..உங்கள் ராசிக்கு என்ன பலன்?
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் புதனின் சஞ்சாரத்தால் லாபம் உண்டாகும். வேலை-வியாபாரத்தில் பெரும் பலன்களைப் பெறப் போகிறார்கள். அவர்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த இது நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பொறுப்பு கூடும். பிள்ளைகளின் படிப்பில் உறுதி இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். யாருக்காவது கடனாக கொடுத்த பணம் திடீரென திரும்ப வரலாம்.