- Home
- Lifestyle
- Vastu Tips: வீட்டு வாசலில் காய்ந்த தோரணம் குடும்பத்தில் சண்டையை மூட்டுமா? வாஸ்து சொல்லும் அதிர்ச்சித் தகவல்!
Vastu Tips: வீட்டு வாசலில் காய்ந்த தோரணம் குடும்பத்தில் சண்டையை மூட்டுமா? வாஸ்து சொல்லும் அதிர்ச்சித் தகவல்!
Family Disputes: வீட்டு வாசலில் கட்டப்படும் மாவிலை தோரணம் காற்றை தூய்மைப்படுத்தி மங்களத்தை அழைக்கும். ஆனால், வாஸ்துப்படி காய்ந்த தோரணத்தை சரியான முறையில் மாற்றாவிட்டால் அதுவே குடும்பத்தில் சண்டை ஏற்படுத்தக்கூடும்.

வீட்டு வாசலில் தோரணம்
பொதுவாக நம் ஊர்களில் வீட்டு வாசலில் தோரணம் கட்டுவதற்குப் பின்னால் பல ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. மாவிலைகள் பறிக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியிடும் திறன் கொண்டவை. வீட்டு விசேஷங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, காற்றைத் தூய்மைப்படுத்த இவை உதவுகின்றன. தீய சக்திகளை உள்ளே விடாமல் தடுத்து, மங்களத்தை வீட்டிற்குள் அழைக்கும் ஒரு கவசமாக இது கருதப்படுகிறது. ஆனால், இதே தோரணம் குடும்பத்தில் சண்டையையும், பணப் பற்றாக்குறையையும் உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான முழு தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
தோரணத்தை அப்படியே விடக்கூடாது
வாஸ்து சாஸ்திரப்படி, தோரணம் கட்டுவது வீட்டுக்கு நேர்மறை ஆற்றலையும் புனிதத்தன்மையையும் தரும். இது குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் இருக்க உதவும். ஆனால், மா அல்லது அசோக இலை தோரணத்தை நீண்ட நாள் அப்படியே விடக்கூடாது. இலைகள் காய்ந்துபோகும்போது, நம் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரத் தொடங்கும்.
சுப நிகழ்ச்சிகள் தோரணம்
சில சமயம், எல்லாம் சரியாக நடப்பது போலத் தெரிந்தாலும், வேலைகள் பாதியிலேயே நிற்கும். ஒரு புது வேலையைத் தொடங்கும்போதோ, சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போதோ சின்னச் சின்ன தடைகள் வரும். அப்படி நடந்தால், உங்கள் வீட்டு வாசலில் உள்ள தோரணம் காய்ந்துவிட்டதா எனப் பாருங்கள். உடனே அதை மாற்றுவது நல்லது.
தோரணத்தை மண்ணில் புதைத்துவிட வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தில், தோரணத்தை மாற்றுவதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகள் அல்லது ஏகாதசி, பௌர்ணமி போன்ற சுப நாட்களில் மாற்றுவது மிகவும் நல்லது. பழைய தோரணத்தைக் குப்பைத் தொட்டியில் போடாமல், மண்ணில் புதைத்துவிட வேண்டும் அல்லது ஓடும் நீரில் விட வேண்டும்.
10 முதல் 15 நாட்களுக்குள் மாற்றிவிட வேண்டும்
புதிய தோரணத்தைக் கட்டிய பிறகு, அதை 10 முதல் 15 நாட்களுக்குள் மாற்றிவிட வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலைத் தக்கவைக்க உதவும். வாஸ்து சாஸ்திரத்தில், காய்ந்த இலைகள் தேக்கம், எதிர்மறை ஆற்றல் மற்றும் பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. வீட்டில் காய்ந்த தோரணம் இருந்தால், மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளைத் தவிர்க்க உடனடியாக மாற்றிவிடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

