MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!

Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!

Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கல் பண்டிகை நாளில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் விதவிதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1 Min read
Kalai Selvi
Published : Jan 10 2025, 03:08 PM IST| Updated : Jan 11 2025, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pongal Pulli Kollam Designs 2025 in Tamil

Pongal Pulli Kollam Designs 2025 in Tamil

பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோலங்கள் தான். கோலங்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை முழுமையடையாது என்று சொல்லலாம். கோலங்கள் வீட்டில் அழகை மட்டுமல்ல மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடையாளப்படுத்துகின்றது. 

25

பொங்கல் நாளில் அதிகாலையில் பெண்கள் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் என்ன கோலம் போடுவது என்பதுதான். எனவே, இந்த பொங்கலுக்கு உங்களுக்காக விதவிதமான சில புள்ளி கோலங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன அவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து நீங்கள் உங்களது வீட்டு வாசலில் போடுங்கள்.

 

35

பொதுவாக வீட்டுமுற்றத்தில் போடும் கோலமானது அரிசி மாவு அல்லது பலவிதமான கலர் பொடிகளை பயன்படுத்தி தான் போடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் படி அரிசி மாவில் போடும் கோலம் தான் எறும்புகள், பறவைகள் போன்ற ஜீவராசிகளுக்கு உணவின் வெளிப்பாடு ஆகும்.

இதையும் படிங்க:   பொங்கல் விருந்தாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் என்னென்ன?

45

கோலங்களில் புள்ளி கோலம், ரங்கோலி போன்ற பல வகைகள் இருக்கிறது. அவற்றில் புள்ளி கோலம் தான் போடுவதற்கு ரொம்பவே ஈசியாக இருக்கும். அதுவும் கிராமங்களில் இளம் பெண்கள் கோலமிட சிறு குழந்தைகள் அதில் வண்ணமிட்டு மகிழ்வார்கள். இப்படியே பொங்கல் பண்டிகையானது நகரங்களில் கூட இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். 

இதையும் படிங்க:  Pongal 2025 : இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!

55

இன்னும் சில இடங்களில் சாணத்தை கரைத்து, அதை வைத்து வீட்டை நன்றாக மொழுகி பிறகு கோலம் போடுவதையும் வழக்கமாக பின்பற்றுகிறார்கள். இப்படி செய்தால் வீட்டில் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கிருமிகள் அழிக்கப்படுவதன் நோக்கமாகும். மேலும் அது கிருமிநாசினியாக செயல்படுவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் ஏதும் ஏற்படாது. இதனால் தான் கோலம் என்பது வெறும் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved