சச்சின் மகள் சாராவுக்கும் இளம் கிரிக்கெட் வீரருக்கும் காதல்..? அதிர்ச்சியில் தூக்கத்தை இழந்த ரசிகர்கள்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கும் இடையே காதல் என்ற ரசிகர்களின் பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் சாரா டெண்டுல்கர்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர். 22 வயதான சாரா டெண்டுல்கர், லண்டனில் படித்தவர்.
சாரா டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரருமான ஷுப்மன் கில்லை காதலிக்கிறார் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அதற்கு வித்திட்டதே சாரா டெண்டுல்கரின் இன்ஸ்டாகிராம் பதிவுதான். நேற்று அபுதாபியில் கேகேஆர் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியின் போது, ஷுப்மன் கில் டைவ் அடித்து செய்த ஃபீல்டிங்கை டிவியில் ஃபோட்டோ எடுத்து, அந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சாரா டெண்டுல்கர், ஹார்ட்டுகளையும் பறக்கவிட்டார்.
அதைக்கண்ட ரசிகர்கள், சாராவும் கில்லும் காதலிப்பதாக கூறிவருகின்றனர். இதை வைத்து மட்டுமே ரசிகர்கள் அவர்களது காதலை ஊகிக்கவில்லை. ஏற்கனவே ஒருமுறை சாரா டெண்டுல்கர், அவரது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, "I Spy" என பதிவிட்டிருந்தார். அதேபோலவே ஷுப்மன் கில்லும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, அதே தலைப்பை கொடுத்து எமோஜியும் போட்டிருந்தார்.
அப்போதே ரசிகர்களும் நெட்டிசன்களும் இதை நோட் செய்து, இருவருக்கும் இடையே காதல் என்று பேச தொடங்கினர். இந்நிலையில், சாரா டெண்டுல்கர், ஷுப்மன் கில் ஃபீல்டிங் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஹார்ட்டுகளை பறக்கவிட்டதால், ரசிகர்கள், இது காதல் தான் என்று உறுதியே செய்துவிட்டனர்.
2018ல் பிரித்வி ஷா தலைமையில் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடியவர் ஷுப்மன் கில். இளம் திறமையான பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லுக்கு கடந்த ஆண்டு(2019) நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணியில் எடுக்கப்பட்டுவருகிறார். ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.