பிராமணராக இல்லாமல் இந்திய அணிக்கு தனிக்காட்டு ராஜாவாக தேர்வான நடராஜன்.. ஆட்டம் கண்ட தமிழக கிரிக்கெட் வாரியம்.!
தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது அதுவும் தமிழகத்திலிருந்து பிராமணர் அல்லாத ஒரு வீரர் இந்திய அணிக்கு தேர்வானது தமிழக கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி என்றே சொல்லலாம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இவர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆடும் அணியில் இடம்பெறாமல், வலைப்பயிற்சியில் பவுலிங் செய்யும் குழுவில் இவர் பெயர் இடம் பெற்று இருந்தது.
இதனால் இவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்வார், அதே சமயம் வலைப்பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார், ஆடும் அணியில் இடம்பெற மாட்டார் என்றும் கூறப்பட்டது
வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால்.. அவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இடம் பிடித்துள்ளார்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி நான் உங்களுக்கு யார்க்கர் வீசுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் சின்னப்பம்பட்டி தீப்பொறி. மேலும் இந்திய அணி தேடிக் கொண்டிருக்கும்போது வீரராகவும் அமைந்துவிட்டார் நடராஜன்
இவ்வருட ஐபிஎல் கண்ட சிறந்த வீரர் நடராஜன். மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்" ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்