ஐபிஎல் 2021 மெகா ஏலம்: 2 மிகப்பெரிய மேட்ச் வின்னர்களை கழட்டிவிடும் கேகேஆர்.. புதிய கேப்டன்
First Published Nov 23, 2020, 5:37 PM IST
ஐபிஎல் 2021க்கான மெகா ஏலத்தில் கேகேஆர் அணி தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் 14 புள்ளிகளை பெற்ற கேகேஆர் அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில், பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

சீசன் இடையில் கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றம், அந்த அணியில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த அணியில் மோர்கன், கம்மின்ஸ், நரைன், ரசல் என வெளிநாட்டு மேட்ச் வின்னர்கள் பலர் இருந்தும் கூட அந்த அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?