MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 1976 முதலே அழிவைச் சந்தித்துவரும் ஜோஷிமத்! அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

1976 முதலே அழிவைச் சந்தித்துவரும் ஜோஷிமத்! அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

நிலச்சரிவுகளால் நிலைகுலைந்து போயிருக்கும் உத்தராகண்டின் ஜோஜிமத் பகுதி 1976 முதலே அபாயகரமான பகுதியாகவே இருந்துவருகிறது என்று புவியியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 Min read
Author : SG Balan
Published : Jan 07 2023, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

உத்தராகண்ட் மாநிலத்தில் இமாலய மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தரையிலும் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

ஜோஜிமத் நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் வீதியில் திரண்டு அரசு நடிவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

38

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெற்றுவந்த அரசின் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

48

அப்பகுதியின் புவியியல் அமைப்புதான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம் என்றும் அங்கு உள்ள நிலம் உறுதியற்று இருப்பதால் பெரிய கட்டடங்களையும் அதிக மக்கள்தொகையையும் தாக்குப்பிடிக்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

58

நீர்மின் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்றவை அங்கு உள்ள சரிவான நிலப்பகுதிகளை மேலும் நிலைத்தன்மை அற்றவையாக ஆக்கிவிட்டன என்றும் குறிப்பிடுகிறார்கள்.

68

இதுமட்டுமின்றி பெருகிவரும் மக்கள்தொகையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. விஷ்ணுப்பிரயாகை நதியின் ஓட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.

78

வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோஷிமத் கட்டப்பட்ட இடத்தின் குறைவான நிலைத்தன்மை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுருக்கிறது.

88

1976ஆம் ஆண்டு வெளியான அறிக்கையிலேயே ஜோஷிமத் பகுதி மக்கள் வசிக்க ஆபத்தான பகுதி என்று கூறப்பட்டுள்ளது என புவியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Stations: ரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் இருக்கு, ஆனா மெடிக்கல் ஷாப் மட்டும் ஏன் இல்ல?
Recommended image2
7 நாட்களில் பதவி விலக வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு கெடு விதித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
Recommended image3
Train Updates : செப்டம்பர் 6-ஆம் தேதி வரை மாற்றப்படும் ரயில் சேவைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved