MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • கிரிமினல் அவதூறு வழக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கிரிமினல் அவதூறு வழக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

'தி வயர்' செய்தி நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாக கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Sep 22 2025, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அவதூறு வழக்குகள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கருத்து
Image Credit : Getty

அவதூறு வழக்குகள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கருத்து

அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாகக் கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2016ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் கிரிமினல் அவதூறு சட்டம் அரசியலைப்பின்படி செல்லுபடியாகும் தன்மை கொண்டவை என உறுதிசெய்தது. அப்போது, நற்பெயருக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமை என்றும், அது கண்ணியமான வாழ்க்கையின் பகுதி என்றும் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பு இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 499-ஐ உறுதி செய்தது. தற்போது, அந்த பிரிவு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 356 ஆக மாற்றப்பட்டுள்ளது.

25
‘தி வயர்’ கிரிமினல் அவதூறு வழக்கு
Image Credit : Getty

‘தி வயர்’ கிரிமினல் அவதூறு வழக்கு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் (JNU) சேர்ந்த பேராசிரியர் ஒருவர், 'தி வயர்' (The Wire) செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில், செய்தி நிறுவனத்திற்கும் அதன் செய்தியாளருக்கும் எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி 'தி வயர்' தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.

Related Articles

Related image1
மூட்டை மூட்டையாக பொய்களை அள்ளி வீசும் தளபதி.. விஜய் மீது பாயும் அவதூறு வழக்கு..? தீவிரம் காட்டும் அரசு
Related image2
விதிகளை மீறினால்... பீகாரில் SIR நடைமுறை ரத்து செய்யப்படும்! உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
35
‘தி வயர்’ கட்டுரையில் குற்றச்சாட்டு
Image Credit : our own

‘தி வயர்’ கட்டுரையில் குற்றச்சாட்டு

2016 ஆம் ஆண்டு 'தி வயர்' செய்தி நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், ஜேஎன்யு பேராசிரியர் "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் இருப்பிடம்" என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை தொகுத்ததாகக் குற்றம் சாட்டியது. அந்த ஆவணத்தில், ஜேஎன்யு "ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் மோசடி மையம்" என்று கூறப்பட்டிருந்தது.

45
அவதூறு வழக்குகள் கிரிமினல் வழக்குகளா?
Image Credit : social media

அவதூறு வழக்குகள் கிரிமினல் வழக்குகளா?

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், "இவை அனைத்தையும் கிரிமினல் குற்றங்களாகக் கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். 'தி வயர்' சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தின் கருத்துடன் உடன்படுவதாகத் தெரிவித்தார்.

55
சுப்ரமணியன் சுவாமி வழக்கு
Image Credit : SOCIAL MEDIA

சுப்ரமணியன் சுவாமி வழக்கு

இந்தியாவில், அவதூறு குற்றம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 356 இன் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி வழக்கில், உச்ச நீதிமன்றம் கிரிமினல் அவதூறு சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. அது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான கட்டுப்பாடாக செயல்படுவதாகவும் அப்போது நீதிமன்றம் கூறியிருந்தது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உச்ச நீதிமன்றம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
மூட்டை மூட்டையாக பொய்களை அள்ளி வீசும் தளபதி.. விஜய் மீது பாயும் அவதூறு வழக்கு..? தீவிரம் காட்டும் அரசு
Recommended image2
விதிகளை மீறினால்... பீகாரில் SIR நடைமுறை ரத்து செய்யப்படும்! உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved