MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?

ஆந்திராவின் எலமஞ்சில்லி அருகே டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 158 பயணிகள் உயிர் தப்பினர்.

1 Min read
vinoth kumar
Published : Dec 29 2025, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்
Image Credit : Asianet News

டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திரா மாநிலம் எலமஞ்சில்லி ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு ஏசி பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. பி1, எம்2 பெட்டிகள் தீயில் எரிந்தன.

23
இரண்டு ஏசி பெட்டிகளில் தீ விபத்து
Image Credit : Asianet News

இரண்டு ஏசி பெட்டிகளில் தீ விபத்து

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 158 பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக உடைமைகளை கூட எடுக்காமல் ரயிலில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். தீ விபத்து குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தீயை அணைத்து ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் உயிரோடு எரிந்து சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவரின் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

Related Articles

Related image1
இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
Related image2
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
33
தீ விபத்து குறித்து விரிவான விசாரணை
Image Credit : Asianet News

தீ விபத்து குறித்து விரிவான விசாரணை

தீப்பிடித்த இரண்டு பெட்டிகளும் உடனடியாக ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தீ விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
Recommended image2
பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!
Recommended image3
பத்மஸ்ரீ, பாரத ரத்னா-ன்னு பேருக்கு முன்னாடி போடக்கூடாது! கறார் காட்டிய உயர் நீதிமன்றம்!
Related Stories
Recommended image1
இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
Recommended image2
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved