MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி

சூடான் தெற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் துணை ராணுவப் படையினர் (RSF) நடத்திய கொடூரத் தாக்குதலில் 116 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மழலையர் பள்ளியில் இருந்த 46 குழந்தைளும் பலியாகியுள்ளனர்.

1 Min read
SG Balan
Published : Dec 07 2025, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சூடானில் உள்நாட்டுப் போர்
Image Credit : Asianet News

சூடானில் உள்நாட்டுப் போர்

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், RSF எனப்படும் துணை ராணுவப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் தெற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள கலோகி என்ற பகுதியில் குறைந்தது 116 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் 46 குழந்தைகள் அடங்குவர். இந்தக் குழந்தைகள் அனைவரும் மழலையர் பள்ளியில் இருந்தவர்கள் என்று உள்ளூர் நிர்வாக இயக்குநர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

23
பள்ளி, மருத்துவமனை இலக்கு
Image Credit : Getty

பள்ளி, மருத்துவமனை இலக்கு

இந்தத் தாக்குதல் குறித்து அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள சூடானிய ஆயுதப் படைகளின் (SAF) இரண்டு இராணுவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளடர். வியாழக்கிழமை முதலிலில் மழலையர் பள்ளியைத் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்து இரத்தக் களங்கத்தில் கிடந்தவர்களுக்கு உதவ முயன்ற பொதுமக்களையும் துணை ராணுவப் படைகள் குறிவைத்துத் தாக்கினர்.

அப்பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகம் மீதும் குண்டுவீச்சு நடத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

Related Articles

Related image1
மெக்சிகோவில் பயங்கர தீ விபத்து! குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!
Related image2
தீபாவளி துப்பாக்கியால் 60 குழந்தைகள் காயம்.. கண் பார்வை பறிபோகும் அபாயம்!
33
ஐ.நா. கண்டனம்
Image Credit : Getty

ஐ.நா. கண்டனம்

இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சூடானுக்கான UNICEF பிரதிநிதி ஷெல்டன் யெட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளை அவர்களது பள்ளியிலேயே கொல்வது என்பது குழந்தைகளின் உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயல்" என்று கண்டித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் பாதுகாப்பாகச் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உலகம்
பயங்கரவாதத் தாக்குதல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Recommended image2
கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்
Recommended image3
நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
Related Stories
Recommended image1
மெக்சிகோவில் பயங்கர தீ விபத்து! குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!
Recommended image2
தீபாவளி துப்பாக்கியால் 60 குழந்தைகள் காயம்.. கண் பார்வை பறிபோகும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved