- Home
- இந்தியா
- பிள்ளைகளுக்காக வீடு கட்டி வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு பிரபலம் சொன்ன அட்வைஸ்
பிள்ளைகளுக்காக வீடு கட்டி வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு பிரபலம் சொன்ன அட்வைஸ்
இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கடன் வாங்கி பெரிய வீடு கட்டுவது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் தங்கள் ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பிரபலம் அறிவுறுத்தி உள்ளார்.

பெற்றோர் ஆலோசனை
இந்திய குடும்பங்களில் பெற்றோர்–பிள்ளைகள் உறவு மிகவும் நெருக்கமானது. பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்ற பிறகு, அவர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து உதவி செய்வது சாதாரணமாக பார்க்கப்படுகிறது. பலர் தங்களது ஆசைகள், கனவுகள் அனைத்தையும் தியாகம் செய்து, “நாம் சந்தித்த கஷ்டம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக, கடன் எடுத்து கூட பெரிய வீடு கட்டி, அதை பிள்ளைகளுக்காக சேமித்து வைப்பதும் வழக்கமாக உள்ளது.
பிள்ளைகளுக்காக வீடு
ஆனால் ‘நாட் டேட்டிங்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜஸ்விர் சிங், இந்த பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துகிறார். தனது உறவினர் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை உதாரணமாக கூறிய அவர், பல வருடங்களாக உழைத்து கட்டப்பட்ட பெரிய வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இது, பெற்றோரின் எதிர்பார்ப்பு மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை முறை இடையேயான இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
குடும்ப வாழ்க்கை
இன்றைய தலைமுறை அதிக வருமானம் ஈட்டுவதுடன், வேறு நகரங்கள் அல்லது நாடுகளில் வாழும் வாய்ப்பு அதிகம். அதனால், 20-30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளில் அவர்கள் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வீடுகளின் வடிவமைப்பு தேவைகளும் காலப்போக்கில் மாறிவிடுகின்றன. 15-20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீடுகள் பழமையானதாக தோன்றும் என்பது உண்மை.
வாழ்க்கை மாற்றம்
இதனால், "பிள்ளைகளுக்காக மட்டும் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணிக்க வேண்டாம்" என ஜஸ்விர் சிங் கூறுகிறார். அதற்கு பதிலாக, ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பு பதிவு. சிலர் “சொந்த வீடு பாதுகாப்பு” என கூற, மற்றவர்கள் “வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்ப புதிய வீடு வாங்கலாம்” என வாதிடுகின்றனர்.

