MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி

Government Employee: தெலங்கானாவில் பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்து, அதை பெற்றோரின் கணக்கில் செலுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 13 2026, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு ஊழியர்கள்
Image Credit : Grok

அரசு ஊழியர்கள்

பெற்றோரை சரியாக கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

25
மாற்றுத் திற​னாளி திரு​மணம்
Image Credit : stockPhoto

மாற்றுத் திற​னாளி திரு​மணம்

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் பால பரோ​சா மற்​றும் பிரணய் டே கேர் எனும் இரண்டு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு ரூ.50 கோடி மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். மாற்றுத் திற​னாளி​கள் ஒரு​வருக்​கொரு​வர் திரு​மணம் செய்து கொண்​டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்​பில் ரூ.2 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும். அதே சமயத்​தில் மாற்றுத் திற​னாளியை திரு​மணம் செய்​பவருக்கும் ரூ.2 லட்​சம் வழங்கப்​படும். அரசு பணி​யிலும் மாற்றுத்திற​னாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்​கப்​படுவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Related image1
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!
Related image2
இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
35
அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்
Image Credit : Getty

அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்

மேலும் பேசிய முதல்வர் அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் உங்களது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அது நேரடியாக உங்களது பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது உங்களுடைய பெற்றோர்களும் அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நான் நிச்சயமாக உறுதி செய்வேன்.

45
பெற்றோர்களின் வங்கி கணக்கில் வரவு
Image Credit : Google

பெற்றோர்களின் வங்கி கணக்கில் வரவு

அரசு ஊழியர்களின் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன் அவர்களது பெற்றோர்களின் வங்கி கணக்கிலும் சம்பளத்தின் ஒரு பகுதி தானாகவே வரவு வைக்கப்படும். இதற்கான சட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக ஒரு குழுவை அமைக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

55
போக்குவரத்து விதிமீறல்கள்
Image Credit : Getty

போக்குவரத்து விதிமீறல்கள்

குடிபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகளில் போக்குவரத்து அபராத தள்ளுபடியை நீக்கவும், விதிமீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி சலான் பெறும் நபர்களுக்கு எந்தவித தள்ளுபடியும் வழங்க வேண்டாம். வாகனங்கள் பதிவு செய்யும்போதே அவற்றின் உரிமையாளர்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஆட்டோ-டெபிட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் ஏதேனும் போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டால், அபராதத் தொகை நேரடியாக வாகன உரிமையாளரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!
Recommended image2
நடுக்கத்தை காட்டியும் அடங்காத பாகிஸ்தான்.. இந்தியாவை சீண்டினால் அழிவுதான்.. ராணுவத் தளபதி எச்சரிக்கை..!
Recommended image3
இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
Related Stories
Recommended image1
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!
Recommended image2
இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved