MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' சொன்னால் குற்றமா? முக்கிய தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!

ஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' சொன்னால் குற்றமா? முக்கிய தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!

ஒருவரிடம் "ஐ லவ் யூ" சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது பாலியல் துன்புறுத்தல் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.

1 Min read
SG Balan
Published : Jul 29 2025, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
"ஐ லவ் யூ" சொல்வது குற்றமா?
Image Credit : Getty

"ஐ லவ் யூ" சொல்வது குற்றமா?

ஒருவரிடம் "ஐ லவ் யூ" (I love you) என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாலியல் உள்நோக்கம் இருந்தது நிரூபிக்கப்பட்டாலன்றி, அதை பாலியல் துன்புறுத்தல் என்று கூற முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ். அகர்வால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தார்.

இந்த வழக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணால் பதிவு செய்யப்பட்டது. பாலியல் உள்நோக்கம் இல்லாமல் தொடுவது பாலியல் குற்றமாகக் கருதப்படாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது.

23
ஆதாரமே இல்லை
Image Credit : our own

ஆதாரமே இல்லை

குற்றம் சாட்டப்படும் நபர் "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டுமே கூறியதாக புகார் அளித்தவரே வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவோ, பின்தொடரவோ செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் உள்நோக்கத்துடன் குற்றத்தைச் செய்தார் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் மைனர் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Related Articles

Related image1
Rasi Palan : "ஐ லவ் யூ" என்று சொல்ல தயங்கும் 4 ராசிக்காரர்கள் இவர்களே!!
Related image2
ஆடைக்குமேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய மும்பை நீதிபதி திடீர் ராஜினாமா
33
2019இல் சிறுமி அளித்த புகார்
Image Credit : Freepik

2019இல் சிறுமி அளித்த புகார்

இந்த வழக்கு சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள குருட் காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஒரு 15 வயது தலித் சிறுமியால் தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பானது. இந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல்துறை FIR பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் தம்தாரி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
உறவு ஆலோசனைகள்
உச்ச நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved