ஷேக் ஹசீனாவுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்; இன்டர்போலிடம் வங்கதேசம் கோரிக்கை
வங்கதேச காவல்துறை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 11 பேருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கோரி இன்டர்போலைத் தொடர்பு கொண்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Former Bangladesh PM Sheikh Hasina
ஷேக் ஹசீனாவுக்கு ரெட் கார்னடர் நோட்டீஸ்:
இந்தியாவில் தஞ்சம் புகுந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் முன்னாள் சாலைப் போக்குவரத்து மற்றும் பாலங்கள் துறை அமைச்சரும் அவாமி லீக் பொதுச் செயலாளருமான ஒபைதுல் குவாட்ர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடக் கோரி, வங்கதேச தேசிய மத்திய பணியகம் (NCB) இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதே பாஜகவின் குறிக்கோள்: ராஜீவ் சந்திரசேகர்
National Central Bureau (NCB) on Red Notice
வங்கதேச காவல்துறை:
நீதிமன்றங்கள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது விசாரணை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மேல்முறையீடுகளின் அடிப்படையில் NCB பிரிவு இன்டர்போலிடம் இதுபோன்ற கோரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை தலைமையகத்தின் ஊடகப் பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (AIG) எனாமுல் ஹக் சாகோர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார் என ஐக்கிய வங்காளதேச செய்தி நிறுவனம் (UNB) தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமும் ரூ.6 கோடி நன்கொடை! 3வது முறையாக அம்பானியை மிஞ்சிய சிவ் நாடார்!
International Crimes Tribunal, Dhaka
இன்டர்போலின் உதவி:
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், நாட்டை விட்டுத் தப்பியோடியவர்களாகக் கருதப்படும் ஷேக் ஹசீனா உள்ளிட்டவர்களைக் கைது செய்வதில் இன்டர்போலின் உதவியைப் பெறுமாறு கடந்த ஆண்டு நவம்பரில் காவல்துறை தலைமையகத்திற்கு ஆலோசனை கூறியிருந்தது.