MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மீனவர்கள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்குமா? இலங்கை பிரதமருடன், நரேந்திர மோடி பேச்சு!

மீனவர்கள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்குமா? இலங்கை பிரதமருடன், நரேந்திர மோடி பேச்சு!

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், நமது பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இனியாவது மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? 

2 Min read
Author : Rayar r
Published : Oct 17 2025, 10:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
PM Modi Meets With Sri Lanka PM Amarasuriya
Image Credit : X

PM Modi Meets With Sri Lanka PM Amarasuriya

தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்க‌டலில் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

24
இலங்கையால் மீனவர்கள் படும் பாடு
Image Credit : Google

இலங்கையால் மீனவர்கள் படும் பாடு

சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் மட்டுமின்றி இலங்கை மீனவர்களும் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சோகம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அதற்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது.

செவிசாய்க்காத மத்திய, மாநில அரசுகள்

ஆனால் இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசுகள் இதற்கு செவிசாய்க்க மறுப்பது வேதனையான விஷயமாக உள்ளது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Related Articles

Related image1
கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப கொடுத்தாலும் மீனவர்கள் பிரச்சனை தீராது - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Related image2
கச்சத்தீவை உடனே மீட்கணும்! இலங்கை பிரதமரிடம் பேசுங்க! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
34
இலங்கை பிரதமருடன் மோடி பேச்சு
Image Credit : x

இலங்கை பிரதமருடன் மோடி பேச்சு

முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய ஹரிணி அமரசூரியா, இன்று நமது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மிக முக்கியமாக நமது மீனவர்கள் பிரச்சனை குறித்து இருவரும் பேசியுள்ளனர்.

44
நமது மீனவர்களின் நலன்
Image Credit : stockphoto

நமது மீனவர்களின் நலன்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், ''இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கண்டுபிடிப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன்புரி உள்ளிட்ட பரந்தளவான விடயங்கள் குறித்து எமது கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது.

மிகவும் நெருக்கமான அயல் நாடுகளாக நமது இரு நாட்டு மக்களினதும் அதேபோல பகிரப்பட்ட பிராந்தியத்தினதும் சுபீட்சத்துக்கு நமது ஒத்துழைப்பானது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது'' என்றார். பிரதமர் மோடி இலங்கை தமிழில் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.

இனியாவது விடிவு காலம் பிறக்குமா?

மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை பிரதமருடன் மோடி பேசியுள்ள நிலையில், இனியாவது நமது மீனவர்கள் பிரச்சனையில் விடிவு காலம் பிறக்குமா? என்பதை பார்ப்போம். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இது குறித்து இலங்கை பிரதமரிடம் பேசும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் மோடி
இந்தியா
இலங்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப கொடுத்தாலும் மீனவர்கள் பிரச்சனை தீராது - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Recommended image2
கச்சத்தீவை உடனே மீட்கணும்! இலங்கை பிரதமரிடம் பேசுங்க! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved