MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கிசான் சம்மான் நிதி 20வது தவணை தேதி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கிசான் சம்மான் நிதி 20வது தவணை தேதி அறிவிப்பு!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணைத் தொகை ஆகஸ்ட் 2 ஆம் தேதி 9.70 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும். 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.2,000 நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

1 Min read
SG Balan
Published : Jul 30 2025, 04:11 PM IST| Updated : Jul 30 2025, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிசான் சம்மான் நிதி
Image Credit : freepik/Social media

கிசான் சம்மான் நிதி

விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20-வது தவணைத் தொகை விடுவிக்கப்படும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி தவணைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

24
4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000
Image Credit : iSTOCK

4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம், ஆண்டுக்கு ரூ.6,000/- மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

➡️The 20th installment of PM-Kisan Samman Nidhi to be released on August 2

➡️Prime Minister @narendramodi to release the installment from Varanasi

➡️Union Agriculture Minister @ChouhanShivraj chairs a high-level meeting to review preparations

➡️Nationwide campaign to ensure… pic.twitter.com/z9Bca3btLw

— PIB India (@PIB_India) July 30, 2025

Related Articles

Related image1
குட் நியூஸ்.! விவசாயிகள் இனி ஈசியாக கடன் வாங்கலாம்.! சிபில் ஸ்கோர் தேவையில்லை-தமிழக அரசு அசத்தல்
Related image2
ரூ.10,000 ஐ மீட்க முயன்று ரூ.1 லட்சம் இழந்த கிருஷ்ணகிரி விவசாயி!
34
ரூ.3.69 லட்சம் கோடி
Image Credit : iSTOCK

ரூ.3.69 லட்சம் கோடி

இதுவரை, இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு 19 தவணைகளாக மொத்தம் 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 20-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.

44
9.70 கோடி விவசாயிகள்
Image Credit : iSTOCK

9.70 கோடி விவசாயிகள்

20-வது தவணைத் தொகையாக, 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார். இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விடுவிப்பு விவசாயிகளின் அன்றாட தேவைகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
விவசாயம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved