பிரதமரின் கிசான் சம்மான் நிதி: விவசாயிகளுக்கு 19வது தவணை எப்போது கிடைக்கும்?
PM Kisan 19th Installment: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 19வது தவணை எப்போது வழங்கப்படும்? மத்திய அரசு விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2000 பணம் செலுத்தும் தேதி நெருங்கிவிட்டது. எப்போது பணம் வரவு வைக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PM Kisan Samman Nidhi 19th Installment payment date
விவசாயிகளின் வாழ்க்கைக்கு தொடர் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த திட்டடம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தின் கீழ் 19வது தவணை பணம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
PM Kisan Samman Nidhi Latest Update
கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 19வது தவணைத் தொகை பிப்ரவரி 24, 2025 அன்று வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்துவார்.
PM Kisan Samman Nidhi Installment
பிரதமர் கிசான் சம்மான் நிதியில் 19வது தவணை பணம் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் கிடைத்து வருவதாகக் கூறினார்.
PM Kisan Samman Nidhi
கிசான் சம்மான் திட்டத்தின் 18வது தவணை 2024ஆம் ஆண்டஉ அக்டோபர் 5ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அப்போது பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் வழங்கினார்.
PM Kisan 19th Installment
விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பலன் பெற, இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்க வேண்டும். கடந்த டிசம்பர் 2024 முதல் பதிவுசெய்த விவசாயிகளுக்கு மட்டும்தான் நிதியுதவி கிடைக்கும் என்ற விதி கொண்டுவரப்பட்டது.