MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விடுமுறையால் திருப்பதியில் குவியும் கூட்டம்.! 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

விடுமுறையால் திருப்பதியில் குவியும் கூட்டம்.! 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

1 Min read
Ajmal Khan
Published : May 26 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திருப்பதியில் குவியும் கூட்டம்
Image Credit : our own

திருப்பதியில் குவியும் கூட்டம்

கலியுக தெய்வமாக வணங்கப்படும் திருமலை வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக திருப்பதியை நோக்கி செல்கிறார்கள். கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் திருமலை வெங்கடேஸ்வர சுவாமியை வேண்டிய நிலை உள்ளது.

23
தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்
Image Credit : our own

தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் 300 ரூபாய் செலவு தரிசனம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்திற்காக முதல் நாள் டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 முதல் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Articles

Related image1
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கை நிறைய சம்பளத்தோடு வேலை.! சூப்பர் அறிவிப்பு
Related image2
Tirupati Temple: இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை! அதிர்ச்சியில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்!
33
2 நாட்களில் கொட்டிய உண்டியல் காணிக்கை
Image Credit : our own

2 நாட்களில் கொட்டிய உண்டியல் காணிக்கை

அதேபோல் இலவச டோக்கன் பெறாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் (விடுமுறை நாட்களான சனி ஞாயிறு) ஒரு லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

அதேபோல் கடந்த 2 நாட்களில் ஆறு கோடியே 90 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக மட்டும் பெறப்பட்டுள்ளது. மேலும் 80 ஆயிரம் பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களில் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திருப்பதி
திருமலை
கோவில் நிகழ்வுகள்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved