MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.! தொடர்கிறது- இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.! தொடர்கிறது- இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.  

1 Min read
Ajmal Khan
Published : May 11 2025, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India Pakistan flags (For representation purpose)

India-Pakistan flags (For representation purpose)

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக போர்க்கான பணியை தீவிரப்படுத்தியது. முப்படைகளோடு தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. சிந்து நதி ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்ட இந்திய அரசு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத மையங்களை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

24

இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்கிக்கொண்டது. இதில் பாகிஸ்தான் விமானப்படை தளம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகள் சேதம் அடைந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இந்தியா- பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியிலான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீரென காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் பறந்ததாக கூறப்பட்டது. இதனை இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.  
 

Related Articles

Related image1
இந்தியாவுக்கு பலத்த அடி! உளறிக் கொட்டிய பாகிஸ்தான் பிரதமரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!
Related image2
பாகிஸ்தானின் 4 விமானப்படை தளங்களை சாம்பலாக்கிய இந்தியா! ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆக்டிவேட்!
34
indian airforce 1

indian airforce 1

இதனையடுத்து நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை எந்தவித தாக்குதலும் எல்லையோரங்களில் நடைபெறவில்லையென கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லையென தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,இந்திய விமானப்படை அப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறை ரீதியாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 

44

நடவடிக்கைகள் விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுடன் சீரமைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டன. அப்ரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை நடத்தப்படும்.  சரிபார்க்கப்படாத தகவல்களை யூகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப் படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
பயங்கரவாதத் தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved