MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • நாத்வாரா கோயிலில் அம்பானி தரிசனம்! ரூ.15 கோடி நன்கொடை.. ரூ.50 கோடி சேவை மையம்!

நாத்வாரா கோயிலில் அம்பானி தரிசனம்! ரூ.15 கோடி நன்கொடை.. ரூ.50 கோடி சேவை மையம்!

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ராஜஸ்தான் நாத்வாரா ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்தார். அவர் ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கியதுடன், பக்தர்களுக்காக ரூ.50 கோடியில் நவீன சேவை மையம் ஒன்றை அமைப்பதாகவும் உறுதியளித்தார்.

1 Min read
SG Balan
Published : Nov 09 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
முகேஷ் அம்பானி தரிசனம்
Image Credit : Asianet News

முகேஷ் அம்பானி தரிசனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியப் புண்ணியத் தலமான நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்தார். குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

நாத்வாராவில் நவீன வசதிகளுடன் பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேவை மையம் ஒன்றை அமைப்பதாக அம்பானி உறுதி அளித்துள்ளார். மேலும், ஸ்ரீ நாத்வாரா ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையையும் வழங்கினார்.

23
ரூ.50 கோடியில் புதிய சேவை மையம்
Image Credit : Asianet News

ரூ.50 கோடியில் புதிய சேவை மையம்

சுமார் ரூ.50 கோடி மதிப்பில் அமையவுள்ள இந்த புதிய மையம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருக்கும். இது வைஷ்ணவ மூத்த குடிமக்கள் மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் கண்ணியமான தங்குமிடத்தை வழங்கும்.

24 மணிநேர மருத்துவப் பிரிவு, செவிலியர் மற்றும் பிசியோதெரபி சேவைகள் இதில் இடம்பெறும். ஆன்மிகச் சொற்பொழிவு செய்வதற்கான பெரிய மண்டபம் அமைக்கப்படும். புஷ்டிமார்க்க மரபின் அடிப்படையில் பாரம்பரிய உணவகம் உருவாக்கப்படும்.

நாத்வாராவுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் சேவை செய்யவேண்டும் என்பது அனந்த் அம்பானியின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
2026 ஐபிஎல் தொடரில் தல தரிசனம் உறுதி.. தோனியின் வருகையை உறுதி செய்த CSK
Related image2
Now Playing
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் வைரலாகும் வீடியோ
33
அம்பானி பேச்சு
Image Credit : ANI

அம்பானி பேச்சு

தரிசனத்துக்குப் பிறகு அம்பானி பேசுகையில், “இந்து சனாதன தர்மம் மற்றும் புனித ஆச்சாரிய மரபைப் பின்பற்றுவதில் வைஷ்ணவர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

விஷால் பாவா சாஹேப் அவர்கள், அனந்த் அம்பானியின் 'வந்தாரா' என்ற தொலைநோக்குத் திட்டத்தைப் பாராட்டியதாகவும் அம்பானி குறிப்பிட்டார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முகேஷ் அம்பானி
இந்தியா
ஆன்மீகம்
வணிகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved