MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மேட்ரிமோனி மோசடி: ராணுவ அதிகாரி போல நாடகமாடி 25 பெண்களிடம் கைவரிசை!

மேட்ரிமோனி மோசடி: ராணுவ அதிகாரி போல நாடகமாடி 25 பெண்களிடம் கைவரிசை!

உத்தரபிரதேசத்தில் போலி ராணுவ அதிகாரியாக நடித்து 25க்கும் மேற்பட்ட பெண்களை மேட்ரிமோனி தளங்கள் மூலம் ஏமாற்றிய நபர் கைது. 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகவும், போலி அடையாள அட்டைகள் மற்றும் சீருடைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

2 Min read
SG Balan
Published : Jul 14 2025, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மேட்ரிமோனி மோசடி
Image Credit : others

மேட்ரிமோனி மோசடி

உத்தரபிரதேச மாநிலத்தில் மேட்ரிமோனி தளங்களில் போலியான புரொஃபைல்களை உருவாக்கி, 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ அதிகாரி போல காட்டிக்கொண்டு 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் பெடபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த NTPC காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தயாளி உப்பால் என்பவரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த மோசடிகளைச் செய்து வந்துள்ளளார்.

தயாளி உப்பால், திருமண வலைத்தளங்கள் மூலம் பெண்களைத் தொடர்பு கொண்டு, தன்னை இராணுவ அதிகாரி ஜோசப் அல்லது அமித் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து, அவர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்வார். இப்படியே இதுவரை 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் மூன்று பெண்களை ஏற்கனவே இராணுவ அதிகாரி என்று கூறி திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

23
மீட்கப்பட்ட பொருட்கள்
Image Credit : our own

மீட்கப்பட்ட பொருட்கள்

கைது செய்யப்பட்ட தயாளி உப்பாலிடம் இருந்து இராணுவ சீருடைகள், மேஜர் அமித் மற்றும் மேஜர் ஜோசப் பெயர்களில் போலி பெயர் பலகைகள், தேசிய புலனாய்வு முகமை (NIA), எல்லைப்புற இராணுவம் (Territorial Army) மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட மத்திய காவல் அமைப்புகளின் போலி அடையாள அட்டைகள், போலி அடையாள அட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அச்சிடும் தாள்கள், அச்சிடும் இயந்திரம், பதக்கங்கள், போலி ஆதார் அட்டை மற்றும் போலி கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

தயாளி உப்பால், தான் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், மேட்ரிமோனி தளங்கள் மூலம் அவர்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும் ஒப்புக்கொண்டார். இராணுவ அதிகாரிகளின் அடையாள அட்டைகளை இணையத்தில் தேடி, அவற்றை தாமே அச்சிட்டு, பெண்களைக் கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் இராணுவத்தில் இல்லை என்று எவரும் சந்தேகம் கொள்ளாதபடி, இராணுவ சீருடைகள், பதக்கங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Related Articles

Related image1
மேட்ரிமோனி தளங்களில் போலி ஐடிக்களைக் கண்டுபிடிப்பது எப்படி? இந்த ஐடியாவை கவனிங்க!!
Related image2
கூகுள் ப்ளேஸ்டோரில் மேட்ரிமோனி ஆப்ஸ் திடீர் நீக்கம்! சேவைக் கட்டண விவகாரத்தில் அதிரடி!
33
போலீசில் சிக்கியது எப்படி?
Image Credit : our own

போலீசில் சிக்கியது எப்படி?

விசாரணையில் வாக்குமூலம் அளித்த தயாளி, தனது தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரினார். சண்டோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இவரைத் திருமணம் செய்ய ஆவணங்களைக் கேட்டபோது, தயாளி உப்பால் கொடுக்க மறுத்ததால் சந்தேகம் ஏற்பட்டு புகார் அளித்துள்ளார்.

காவல்துறை தயாளி உப்பால் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேலும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
திருமணம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
Recommended image2
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
Recommended image3
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
Related Stories
Recommended image1
மேட்ரிமோனி தளங்களில் போலி ஐடிக்களைக் கண்டுபிடிப்பது எப்படி? இந்த ஐடியாவை கவனிங்க!!
Recommended image2
கூகுள் ப்ளேஸ்டோரில் மேட்ரிமோனி ஆப்ஸ் திடீர் நீக்கம்! சேவைக் கட்டண விவகாரத்தில் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved