MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஷாக்கிங் நியூஸ்! 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை!

ஷாக்கிங் நியூஸ்! 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை!

50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.230 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Jun 07 2025, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
50,000 அரசு ஊழியர்கள்
Image Credit : our own

50,000 அரசு ஊழியர்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் இருந்து வருகிறார். இந்நிலையில் அம்மாநில அரசு ஊழியர்கள் 50,000 பேருக்கு 6 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் ரூ.230 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும்.

24
சம்பளம் இல்லை
Image Credit : our own

சம்பளம் இல்லை

இதுதொடர்பாக மே 23ம் தேதி கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர் மற்றும் பணியாளர் குறியீடு உள்ள ஊழியர்களுக்கு டிசம்பர் 2024 முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில் 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும் 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.

Related Articles

Related image1
வீட்டிலிருந்தே வருமானம்: சம்பளம் போல பணம் தரும் செயலிகள்!
Related image2
நகையை அடமானம் வைக்க போறீங்களா? உங்களுக்கு ஜாக்பாட் தான்! 85% நகைக்கடன் - RBI புதிய முடிவு
34
ரூ.230 கோடி முறைகேடு
Image Credit : our own

ரூ.230 கோடி முறைகேடு

ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசு பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ.230 கோடி முறைகேடு நடப்பதை அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நெருக்கடி காரணமாகவே கடிதம் 6 மாத காலம் சம்பளம் வழங்காததன் காரணமாக 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். 

44
 6000 துறை அதிகாரிகளுக்கு கடிதம்
Image Credit : our own

6000 துறை அதிகாரிகளுக்கு கடிதம்

இதனால் கருவூல மற்றும் கணக்கு ஆணையம் மே 23ம் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சுமார் 6,000 துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது. ஆனாலும் இந்த கடிதம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
இந்தியா
சம்பளம்
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved