MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • வீட்ல யாரும் இல்ல வரையா! ஆசையாய் கூப்பிட்ட ஸ்ரீசா! குஷியில் சென்ற சுரேஷ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

வீட்ல யாரும் இல்ல வரையா! ஆசையாய் கூப்பிட்ட ஸ்ரீசா! குஷியில் சென்ற சுரேஷ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

ஆந்திராவில், தனது மனைவிக்கு கல்லூரி நண்பருடன் இருந்த கள்ளக்காதலை அறிந்த வழக்கறிஞர், மனைவியை மிரட்டியே காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அடியாட்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி கோதாவரி ஆற்றில் வீசியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Oct 07 2025, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வழக்கறிஞர் சத்தியநாராயணன்
Image Credit : our own

வழக்கறிஞர் சத்தியநாராயணன்

ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீசா. சத்தியநாராயணன் நீதிமன்றமே கதி இருந்துள்ளார். இதனால் மனைவி ஸ்ரீசா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தன்னுடன் கல்லூரி படித்த சுரேஷ் என்பவருடன் ஸ்ரீசா மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது.

24
கள்ளக்காதல்
Image Credit : Getty

கள்ளக்காதல்

இந்த நட்பு நாளடைவில் இருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. எனவே சத்தியநாராயணன் இல்லாத நேரத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கதத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஸ்ரீசா தொடர்ந்து சுரேஷுடன் பழகி வந்துள்ளார்.

Related Articles

Related image1
டெய்லி வேணும்! நைட்டானாவே போதும் ஒயாமல் டார்ச்சர் கொடுத்த பொண்டாட்டி! கதறும் கணவர்!
Related image2
ஏண்டா! அண்ணாமலை பெயரை சொல்லி போர்சரியா பண்றீங்க! பாஜக பிரமுகர்களை தூக்கிய போலீஸ்!
34
விஷயம் தெரிந்த கணவர்
Image Credit : Asianet News

விஷயம் தெரிந்த கணவர்

இதனால் ஆத்திரமடைந்த கணவர் சத்தியநாராயணன் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டியா என்று கூறி மனைவி சரமாரியாக அடித்துள்ளார். மேலும் நான் சொல்வதை செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீசா மூலமாகவே சுரேஷை அவரது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.அங்கு அடியாட்களுடன் காத்திருந்த சத்தியநாராயணன் சுரேஷ் வந்ததும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல வழக்கம் போல் தனது வேலைகளை செய்து வந்துள்ளார்.

44
உடல் கோதாவரி ஆற்றில் வீச்சு
Image Credit : ANI

உடல் கோதாவரி ஆற்றில் வீச்சு

எங்கு தேடியும் சுரேஷ் கிடைக்காததால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் சுரேஷை தேடி வந்த நிலையில் கோதாவரி ஆற்றில் ஒரு சாக்கு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சுரேஷின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சுரேஷ் யாருடன் கடைசியாக பேசியுள்ளார் என ஆராய்ந்தனர். அதில் ஸ்ரீசா வீட்டில் சுரேஷ் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் ஸ்ரீசாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீசா, சத்தியநாராயணனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
இந்தியா
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved