MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • இந்தியா
  • மொத்தமாக கொட்டிய கனமழை.. அடித்து செல்லப்பட்ட பாலங்கள்.. மண்ணுக்குள் புதைந்து 17 பேர் பலியான சோகம்!

மொத்தமாக கொட்டிய கனமழை.. அடித்து செல்லப்பட்ட பாலங்கள்.. மண்ணுக்குள் புதைந்து 17 பேர் பலியான சோகம்!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

2 Min read
Author : Rayar A
Published : Oct 05 2025, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மேற்கு வங்கத்தில் கனமழை
Image Credit : Asianet News

மேற்கு வங்கத்தில் கனமழை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது டார்ஜிலிங்கில் நேற்று இரவு பெய்த கனமழையால் மிரிக் மற்றும் சுகியா போக்காரி போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாலம் ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் சிலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், உள்ளூர் நிர்வாகமும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நிலச்சரிவுக்கு 17 பேர் பலி
Image Credit : social media

நிலச்சரிவுக்கு 17 பேர் பலி

ஆனால் 17 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துர்கா பூஜையை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பிற பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங்கிற்குப் பயணம் மேற்கொள்வதால், பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related Articles

Related image1
நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் கேரளா; சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் நீதிமன்றம்
Related image2
கண் முன்னே சரிந்த மலை..! நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி... அதிர்ச்சி வீடியோ..!
34
போக்குவரத்து முடங்கியது
Image Credit : Asianet News

போக்குவரத்து முடங்கியது

நிலச்சரிவுகளால் வங்காளத்தையும் சிக்கிமையும் இணைக்கும் சாலை மற்றும் டார்ஜிலிங்கைச் சிலிகுரியுடன் இணைக்கும் சாலை சேதமடைந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங் உள்பட மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

44
சுற்றுலா தலங்கள் மூடல்
Image Credit : Asianet News

சுற்றுலா தலங்கள் மூடல்

டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் என டார்ஜிலிங்கில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, சிலிகுரி மற்றும் கூச் பெஹார் ஆகிய பகுதிகளும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங் உள்பட மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் வரும் 7ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

டார்ஜிலிங் எம்.பி. சொல்வது என்ன?

''கனமழை மற்றும் நிலச்சரிவாஅல் உயிரிழப்புகள், சொத்து இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் நிலைமையை ஆராய்ந்து வருகிறேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்தா தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கனமழை
மழை செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: மாதம் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? 50% உயர்கிறதா பென்ஷன்? அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா?
Recommended image2
UPI Charges: ரூ.2,000-க்கு மேல் UPI பேமென்ட்டா? இனி புதிய கட்டணம்! யாருக்கு ₹5, யாருக்கு 0.4%?
Recommended image3
வைரலாகும் அம்பானி மருமகளின் நடனம்! ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் கேரளா; சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் நீதிமன்றம்
Recommended image2
கண் முன்னே சரிந்த மலை..! நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி... அதிர்ச்சி வீடியோ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved