MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆம்னி பேருந்து பயங்கர தீ விபத்து 25 பயணிகள் உயிரிழப்பு? விபத்துக்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

ஆம்னி பேருந்து பயங்கர தீ விபத்து 25 பயணிகள் உயிரிழப்பு? விபத்துக்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

ஆந்திராவின் கர்னூல் அருகே ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் காவேரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, 12 பேர் காயங்களுடன் தப்பினர். 

1 Min read
vinoth kumar
Published : Oct 24 2025, 07:52 AM IST| Updated : Oct 24 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்னி பேருந்தில் தீ விபத்து
Image Credit : @sudhakarudumula/X

ஆம்னி பேருந்தில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 42 பயணிகளுடன் நேற்று இரவு காவேரி டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வேகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

24
மளமளவென பரவிய தீ
Image Credit : Social Media

மளமளவென பரவிய தீ

அதிகாலை என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று எழுந்து பார்ப்பதற்குள் தீ மளமளவென பேருந்தும் முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அலறி துடித்தனர். இதில் சிலர் பேருந்தில் இருந்து ஏகிறி கீழே குதித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
தீபாவளி துப்பாக்கியால் 60 குழந்தைகள் காயம்.. கண் பார்வை பறிபோகும் அபாயம்!
Related image2
டி.கே.சிவகுமாரின் பதவிக்கு ஆப்பு வைக்கும் சித்தராமையாவின் வாரிசு..! நவம்பர் புரட்சியில் அணுகுண்டு..?
34
25 பேர் உடல் கருகி பலி
Image Credit : our own

25 பேர் உடல் கருகி பலி

சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 12 காயமின்றி உயிர் தப்பினர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

44
முதல்வர் இரங்கல்
Image Credit : social media

முதல்வர் இரங்கல்

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கோர விபத்து குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தீ விபத்து
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved