MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • கொட்டித் தீர்க்கும் கனமழை-நிலச்சரிவு! 31 பக்தர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியான சோகம்!

கொட்டித் தீர்க்கும் கனமழை-நிலச்சரிவு! 31 பக்தர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியான சோகம்!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. 31 பக்தர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியானார்கள். 

2 Min read
Rayar r
Published : Aug 27 2025, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
31 Dead In J&K Landslide, Yatra Suspended
Image Credit : x.com

31 Dead In J&K Landslide, Yatra Suspended

ஜம்மு-காஷ்மீரில் கனமழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாவி, செனாப் நதிகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளது.

24
ஜம்மு-காஷ்மீரில் கனமழை; மண்ணுக்குள் புதைந்த பக்தர்கள்
Image Credit : social media

ஜம்மு-காஷ்மீரில் கனமழை; மண்ணுக்குள் புதைந்த பக்தர்கள்

தாவி நதியின் குறுக்கே இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிக்கியிருந்த 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 31 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். கோயிலுக்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளது. பாலங்கள், மின்கம்பங்கள், மொபைல் டவர்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

Related Articles

Related image1
ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
Related image2
அதிகாலையிலேயே சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை! சுரங்கபாதையில் சூழ்ந்த தண்ணீர்! போக்குவரத்து பாதிப்பு!
34
மீட்பு பணிகள் தீவிரம்
Image Credit : X

மீட்பு பணிகள் தீவிரம்

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ஜம்மு போலீஸ், கோயில் வாரிய ஊழியர்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைஷ்ணோ தேவி கோயிலுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை யாத்ரீகர்கள் பயணத்தைத் தொடங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

44
ரயில் சேவைகள் பாதிப்பு, 18 ரயில்கள் ரத்து
Image Credit : X

ரயில் சேவைகள் பாதிப்பு, 18 ரயில்கள் ரத்து

ஜம்மு காஷ்மீரின் சக்கி நதியில் மண் அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து பதான்கோட் கன்ட் மற்றும் கந்த்ரோரி இடையே ரயில் பாதை பாதிக்கப்பட்டதால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இந்த நிலச்சரிவை மிகவும் துயரமானது என்று தெரிவித்தார்.

உமர் அப்துல்லாவுடன் அமித்ஷா பேச்சு

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் துயரமானது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜி மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜி ஆகியோருடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உதவ உள்ளூர் நிர்வாகம் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் NDRF குழுவும் அங்கு சென்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜம்மு காஷ்மீர்
கனமழை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்
Recommended image2
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
Recommended image3
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
Related Stories
Recommended image1
ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
Recommended image2
அதிகாலையிலேயே சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை! சுரங்கபாதையில் சூழ்ந்த தண்ணீர்! போக்குவரத்து பாதிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved