MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • டிசம்பர் 6.. மொத்த இந்தியாவும் கதறணும்.. நாட்டையே சீர்குலைக்க காத்திருந்த தீவிரவாதிகள்..!

டிசம்பர் 6.. மொத்த இந்தியாவும் கதறணும்.. நாட்டையே சீர்குலைக்க காத்திருந்த தீவிரவாதிகள்..!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 13 2025, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
13 உயிர்களை பறித்த டெல்லி தாக்குதல்
Image Credit : X

13 உயிர்களை பறித்த டெல்லி தாக்குதல்

டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை வெடிக்கச் செய்தது மருத்துவர் முகமது உமர் நபி தான் என்பதை டிஎன்ஏ அடிப்படையில் அதிகாரிகள் உறுதி செய்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மருத்துவர்களையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

24
NIA விசாரணை
Image Credit : X

NIA விசாரணை

முன்னதாக இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்த நிலையில், பயங்கரவாத தொடர்பு இருப்பதால் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Related image1
அப்பாவி மக்கள் சூழ்ந்திருக்க திடீரென வெடித்துச் சிதறிய i20.. சினிமா காட்சிகளை மிஞ்சிய டெல்லி விபத்து
Related image2
டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..! மத்திய அமைச்சரவை உறுதி!
34
டிசம்பர் 6 தான் டார்கெட்
Image Credit : X

டிசம்பர் 6 தான் டார்கெட்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி டெல்லியின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி திட்டமிடப்பட்டிருந்ததாகவும். ஹரியானா மாநிலத்தில் சுமார் 3000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர் உமர் நபி இனி நாம் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் அன்றைய தினமே டெல்லியில் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

44
32 கார்கள்
Image Credit : X@SachinGuptaUP

32 கார்கள்

இந்த தாக்குதலுக்காக 32 கார்களில் வெடிபொருட்களை நிரப்பி டெல்லியில் மக்கள் கூடும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதல் நடத்துவதற்காக உமர் வாங்கியிருந்த ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட் கார், பிரெஸ்ஸா காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தில்லி
பயங்கரவாதத் தாக்குதல்
தேசிய புலனாய்வு முகமை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved