MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இஸ்ரோவின் புதிய மைல்கல்! விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனை வெற்றி!

இஸ்ரோவின் புதிய மைல்கல்! விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனை வெற்றி!

இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2027-க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Aug 24 2025, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்கான சோதனை
Image Credit : ISRO

விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்கான சோதனை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முக்கிய அங்கமான விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி, விண்வெளிப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.

23
ககன்யான் திட்டத்தின் நோக்கம்
Image Credit : ISRO

ககன்யான் திட்டத்தின் நோக்கம்

2027-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன் பிறகு, அவர்கள் பாதுகாப்பாக விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்.

மனிதர்கள் செல்வதற்கு முன், இஸ்ரோ மூன்று முறை ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி, அவை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை சோதிக்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.

Related Articles

Related image1
ககன்யான் திட்டத்துக்கு சுபான்ஷு சுக்லாவின் அனுபவம் உதவும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
Related image2
மிகத் துல்லியமான ஏவுதல்! நிசார் செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ சாதனை
33
பாராசூட் சோதனை
Image Credit : ISRO

பாராசூட் சோதனை

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இஸ்ரோ பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விண்கலம் கடலில் தரையிறங்கும் மற்றும் மீட்டெடுக்கும் செயல்முறையைச் சோதிக்கும் வகையில் இந்த பாராசூட் சோதனை நடத்தப்பட்டது.

இஸ்ரோ, இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வெற்றி, ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய படிநிலையாகக் கருதப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
விண்வெளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
ககன்யான் திட்டத்துக்கு சுபான்ஷு சுக்லாவின் அனுபவம் உதவும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
Recommended image2
மிகத் துல்லியமான ஏவுதல்! நிசார் செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ சாதனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved