MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அணுசக்தி சோதனையால் பாகிஸ்தான், சீனா, துருக்கியில் தொடர் நிலநடுக்கமா? பகீர் தகவல்!

அணுசக்தி சோதனையால் பாகிஸ்தான், சீனா, துருக்கியில் தொடர் நிலநடுக்கமா? பகீர் தகவல்!

பாகிஸ்தான், துருக்கி, சீனாவில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், அணுசக்தி சோதனைகளால் இது நிகழ்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2 Min read
Rayar r
Published : May 16 2025, 01:05 PM IST| Updated : May 16 2025, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nuclear testing cause of earthquakes?
Image Credit : Getty

Nuclear testing cause of earthquakes?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையெல்லாம் தவிடு பொடியாக்கிய நமது ராணுவம் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், பயங்கரவாத முகாம்களை தகர்த்தெறிந்தது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இது இயற்கையாக நிகழ்ந்த நிலநடுக்கமா? இல்லை அணு ஆயுத சோதனையின் வெளிப்பாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

24
சீனா, துருக்கியில் தொடர் நிலநடுக்கம்
Image Credit : Getty

சீனா, துருக்கியில் தொடர் நிலநடுக்கம்

இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த சீனாவில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 6:29 மணிக்கு ஏற்பட்டது. சீனாவின் உகான் மாகாணத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் துருக்கியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதிலும் எந்தவித சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இதேபோல் பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் கடந்த 10ம் தேதி அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பஞ்சாப் மாகாணத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஐந்து நாட்களில் பதிவான மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். இப்படியாக 3 நாடுகளிலும் ஒருசேர நிலநடுக்கம் பதிவாகி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Related Articles

Related image1
Now Playing
Myanmar Earthquake | மியான்மர் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!முழுவீச்சில் மீட்புப்பணிகள்!
Related image2
Indias Nuclear Energy: இந்தியாவின் கடந்த 10 ஆண்டுகால அணுசக்தி உற்பத்தி சாதனைகள் என்ன?
34
அணுசக்தி சோதனையால் உருவான நிலநடுக்கமா?
Image Credit : Getty

அணுசக்தி சோதனையால் உருவான நிலநடுக்கமா?

அணுசக்தி சோதனைகள் மேற்கொண்டதால் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இது இயற்கையாக நிகழ்ந்த நிலநடுக்கம் அல்ல என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''இன்று காலை சீனாவை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. நேற்று இரவு துருக்கியை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. 

கடந்த 1-2 வாரங்களில் பாகிஸ்தானை சுமார் 4 ரிக்டர் அளவிலான பல நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இது இயற்கையான நிலநடுக்கமா? அல்லது அணு ஆயுத சோதனைகளால் நிகழ்ந்ததா?'' என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

44
இந்திய விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
Image Credit : Getty

இந்திய விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

''இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த நாடுகள் அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டு வருகின்றன'' என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார். ஆனால் NCS இயக்குனர் O P மிஸ்ரா உட்பட இந்திய விஞ்ஞானிகள் அணுசக்தி சோதனை கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இது இய்ற்கையாக நிகழந்த நிலநடுக்கம் என்றும், அணுசக்தி சோதனையால் உண்டான நிலநடுக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நிலநடுக்கம்
இந்தியா-பாகிஸ்தான் போர்
சீனா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved