MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஜிபிஎஸ் சுங்கக் கட்டணம் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

ஜிபிஎஸ் சுங்கக் கட்டணம் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உண்மையா? மத்திய அரசின் தெளிவான விளக்கத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

2 Min read
Author : Suresh Manthiram
Published : Apr 18 2025, 06:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. அது என்னவென்றால், இனி வரும் மே மாதம் முதல், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் செல்லும் தூரத்தைப் பொறுத்து, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாம். இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் ஒருவித குழப்பமும், கேள்வியும் எழுந்தது. சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், இந்த புதிய முறை எப்படி செயல்படும், கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற பல கேள்விகள் அவர்களை சூழ்ந்திருந்தன.

27

இந்நிலையில், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சுங்கச்சாவடிகளில் மே 1 முதல் ஃபாஸ்டேக் முறைக்கு பதிலாக ஜிபிஎஸ் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ அத்தகைய எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். பொதுமக்கள், ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவிய குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 

37

அதே நேரத்தில், மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கும், பயண நேரத்தைக் குறைப்பதற்கும் ஒரு புதிய முறையை பரிசீலித்து வருகிறது. அதுதான் தானியங்கி வாகன எண்plate வாசிப்பு (Automatic Number Plate Reader - ANPR) மற்றும் ஃபாஸ்டேக் அடிப்படையிலான கட்டண வசூலிப்பு முறை. இந்த முறையில், வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் கேமரா மூலம் தானாகவே பதிவு செய்யப்படும். அதோடு, தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறையில் உள்ள ரேடியோ-அதிர்வெண் அடையாள அட்டையும் (RFID) பயன்படுத்தப்படும். இதன் மூலம், சுங்கச்சாவடியை நெருங்கும் வாகனத்திலிருந்து மிக விரைவாக கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமே இருக்காது.
 

47

இந்த புதிய முறை தற்போது ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் முடிவுகளையும், பொதுமக்களின் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே, நாடு முழுவதும் இந்த முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

57

ஆகவே, ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தவறான தகவலை நம்ப வேண்டாம். தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். 

67

அதே நேரத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த புதிய முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், பயண நேரம் கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. அதுவரை, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை காத்திருப்போம்!

77

இதையும் படிங்க: G Pay, PayTM, Phonepe ,UPI-ல் பணம் அனுப்ப சிக்கலா? சரி செய்ய 5 எளிய வழிகள்

இதையும் படிங்க: ஏர்டெல் & Blinkit: இனி சிம் கார்டு 10 நிமிடத்தில் டெலிவரி!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
வணிகம்
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் இந்திய அஞ்சல் துறை..! 24 மணி நேரத்தில் டெலிவரி..
Recommended image2
LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
Recommended image3
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved