MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயிலில் நெய் எடுத்துச் செல்லலாமா? விதிமுறைகள் சொல்வது என்ன?

ரயிலில் நெய் எடுத்துச் செல்லலாமா? விதிமுறைகள் சொல்வது என்ன?

ரயில்வே சட்டப்படி, எளிதாக தீ பிடிக்கும் பொருட்களை  ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக கியாஸ் சிலிண்டர், பட்டாசு போன்ற பல பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், ரயிலில் நெய் கொண்டு செல்லலாமா?

1 Min read
Author : SG Balan
Published : Oct 26 2024, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரயிலில் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்பவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989-இன் பிரிவு 67, 164, 165 பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். எடுத்துச் செல்லும் பொருளின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்து, தண்டனை அதிகரிக்கலாம்.

25

பயணிகள் ரயிலில் ஒரு முழு பெட்டியை வாடகைக்கு எடுக்கும்போதும், சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும்போதும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று எழுத்துபூர்வ உறுதிமொழி பெறப்படும். ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்மிக யாத்திரை ரயில்களில் பயணிகள் கொண்டுவரும் பொருள்கள் ரயில்வே பாதுகாப்பு குழுவால் சோதனை செய்யப்படும்.

35

பொதுவாக கியாஸ் சிலிண்டர், பட்டாசு, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வெல்டிங்க் கருவிகள், உலர்ந்த புல் மற்றும் சருகுகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அமிலப் பொருட்கள் போன்றவற்றை ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய சட்டம் ஆகும்.

45

சில பொருள்களை குறிப்பிட்ட அளவில் மட்டும் எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதிக்கிறது. அந்த வகையில் பயணிகள் ரயிலில் நெய்யை எடுத்துச் செல்லலாம். ஆனால், 20 கிலோ வரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். ​​அதுவும் கசிவு ஏற்படாத வகையில் இறுக்கமாக மூடப்பட்ட டின்னில் பாதுகாப்பாக பேக் செய்திருக்க வேண்டும்.

55
Trains Cancelled

Trains Cancelled

நெய்யை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடுத்துச் சென்றாலும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, ரயிலில் பயணிப்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லாமல் ஒத்துழைப்பு தரவேண்டும். ரயில்வே துறையின் விதிகளுக்குக் கட்டுப்பட்ட தீப்பிடிக்கும் பொருள்கள் ரயில் பயணத்தின்போது எடுத்துச் செல்லக்கூடாது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Recommended image2
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!
Recommended image3
இந்தியாவில் நேருக்கு நேர் சந்திக்கும் உலகின் பரம எதிரிகள்..! ரத்தக் கொதிப்பில் பாகிஸ்தான்- சீனா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved