MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பஹல்காம் தாக்குதல்! ஐ.எம்.எஃப்‍-பிடம் செல்லும் இந்தியா! பாகிஸ்தானுக்கு மரண அடி!

பஹல்காம் தாக்குதல்! ஐ.எம்.எஃப்‍-பிடம் செல்லும் இந்தியா! பாகிஸ்தானுக்கு மரண அடி!

பாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்துமாறு ஐ.எம்.எஃப்‍-பிடம் இந்தியா கோரிக்கை விடுக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

2 Min read
Rayar r
Published : May 03 2025, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

India to ask IMF stop financial aid Pakistan: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவதால் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசாவையும் ரத்து செய்வதாக அறிவித்தது. 

24
India-Pakistan Clash

India-Pakistan Clash

ஐ.எம்.எஃப்‍-பிடம் செல்லும் இந்தியா

பாகிஸ்தானின் வர்த்தக தொடர்பையும் முழுமையாக நிறுத்திய இந்தியா, அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கையாக, அந்த நாட்டுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட உலகளாவிய பலதரப்பு நிறுவனங்களிடம் இந்தியா வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Related Articles

Related image1
இந்தியா எடுத்த ஸ்மார்ட் மூவ்! ஒன்னுமே செய்ய முடியாமல் திணறும் பாகிஸ்தான்
Related image2
இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா நதிநீர் செல்வதை நிறுத்துங்கள்! சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!
34
IMF, India

IMF, India

43.4 பில்லியன் டாலர் நிதியுதவி

IMF நிர்வாகக் குழு மே 9 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்து, தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியை மதிப்பாய்வு செய்யவும், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் கீழ் நிதியுதவிக்கான கோரிக்கையை பரிசீலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு காலநிலை மீள்தன்மை திட்டத்தின் கீழ் 1.3 பில்லியன் டாலர் நிதியை ஐ.எம்.எஃப் வழங்க இருக்கிறது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) பாகிஸ்தானுக்கு 764 பொதுத்துறை கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. மொத்தம் 43.4 பில்லியன் டாலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.

44
India vs Pakistan

India vs Pakistan

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் 

இதில் கைபர் பக்துன்க்வா கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான 320 மில்லியன் டாலர் கடனும் அடங்கும். ஜனவரி 2025 இல், உலக வங்கியும் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை சமாளிக்க உதவும் வகையில் 20 பில்லியன் டாலர் கடன் தொகுப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கோருவதற்கான உரிமையை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பஹல்காம்
இந்தியா
பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved