MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பண்ணை வீட்டில் விடிய விடிய! வசமாக சிக்கிய 20 இளம்பெண்கள்! 11 இளைஞர்கள்! நடந்தது என்ன?

பண்ணை வீட்டில் விடிய விடிய! வசமாக சிக்கிய 20 இளம்பெண்கள்! 11 இளைஞர்கள்! நடந்தது என்ன?

பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடந்த போதை ரேவ் பார்ட்டியில் 20 இளம்பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

1 Min read
vinoth kumar
Published : May 27 2025, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பெங்களூரு
Image Credit : Google

பெங்களூரு

பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளி தாலுகாவின் கன்னமங்களா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் டிஜே மியூசிக் ஒலித்தது. இதனால் கடுப்பான அக்கம் பக்கத்தினர் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டிஜே மியூசிக் போட்டு தூக்கத்தை கெடுப்பதாகவும், இதுதொடர்பாக பார்ட்டி மேலாளரை பலமுறை கண்டித்தும் அதை கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டுவதாக குற்றம் சாட்டிருந்தனர்.

23
சிக்கிய 20 இளம்பெண்கள்
Image Credit : Google

சிக்கிய 20 இளம்பெண்கள்

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விரைந்து அதிரடி சோதனை நடத்தியதில் இளம்பெண்கள், இளைஞர்கள் என 30க்கும் மேற்பட்டோர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை விடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பார்ட்டியில் பங்கேற்று போதை மயக்கத்தில் இருந்த 20 இளம்பெண்கள் உட்பட 31 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

Related Articles

Related image1
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷார்! வானிலை மையம் வார்னிங்!
Related image2
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவர்! பறிபோன இரண்டு உயிர்! தலைமறைவான பெண் அதிரடி முடிவு!
33
போதைப் பொருள் பறிமுதல்
Image Credit : our own

போதைப் பொருள் பறிமுதல்

அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இந்த போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பண்ணை வீட்டில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருட்களான கோகைன், ஹைபிரிட் கஞ்சா, சரஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேவ் பார்ட்டி என்ற பெயரில் விடிய விடிய ஆட்டம் போட்டு போதையில் எல்லைமீறிய 20 பெண்கள் உட்பட 31 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
பெண்கள்
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved