- Home
- இந்தியா
- Floating Cylinders : வெள்ளத்தில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்! வைரலாகும் பகீர் வீடியோ!
Floating Cylinders : வெள்ளத்தில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்! வைரலாகும் பகீர் வீடியோ!
Floating Cylinders: மகாராஷ்டிராவின் ராய்கட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை பொதுமக்கள் யாரும் தொட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

3,000 சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு பதற்றமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள எச்பிசிஎல் (HPCL) பாதாளகங்கா எல்பிஜி பாட்லிங் ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Courtesy : thetruth.india Instagram Page
அதிகாரிகள் தகவல்
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் அல்லது கரையோரத்தில் சிலிண்டர்கள் கண்டால், அவற்றைத் தொடவோ, வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ, திறக்க முயற்சிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில சிலிண்டர்களில் எரிவாயு இருக்கலாம் என்பதால், அவை ஆபத்தானவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
கண்டெடுக்கப்படும் சிலிண்டர்களை அருகிலுள்ள HPCL டீலர், வட்டாட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு ராய்கட் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Bike with Coins : சில்லறைக் காசுகள் கொடுத்து 1 லட்சம் ரூபாய் பைக் வாங்கிய இளைஞர்!

