MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காலையில் சுக்கு மல்லி கஷாயம்... எவ்வளவு சளி இருந்தாலும் முறிக்கும்.. 1 டம்ளர் குடித்தால் போதும்..!

காலையில் சுக்கு மல்லி கஷாயம்... எவ்வளவு சளி இருந்தாலும் முறிக்கும்.. 1 டம்ளர் குடித்தால் போதும்..!

சளி, இருமலுக்கு நிவாரணம் கிடைக்க, இந்த கஷாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். சில நிமிடங்களில் தொண்டைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.  

1 Min read
Author : maria pani
| Updated : Mar 24 2023, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கொத்தமல்லியை போலவே அதன் விதைகள் பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஆகிய பல சத்துக்களும் இதில் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இந்த விதைகளை வைத்து தயார் செய்யும் கஷாயம் இருமலையும், சளியையும் விரட்டிவிடும். 

25

காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் தான் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலையில் காபி, தேநீருக்கு பதிலாக இந்த கஷாயத்தை செய்து பரிமாறவும். இந்த மூலிகை தேநீர் இருமலை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த கசாயத்தை சில பொருள்களை கொண்டு தயார் செய்துவிடலாம். 

35

தேவையான பொருட்கள்

* கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன் 
* கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன் 
* சுக்கு - 2 துண்டு 
* பனை வெல்லம் - 1 கைப்பிடி 
* 3 கப் தண்ணீர்

45

செய்முறை 

அனைத்து பொருட்களையும் பொடியாக உடைத்து கொள்ளுங்கள். 3 கப் தண்ணீர், 1 1/2 கப் வரும் வரை எல்லா பொருட்களையும் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இப்படி சுண்டக் காய்ச்சி வடிகட்டி அருந்தினால் மிளகின் காட்டம் தொண்டையில் உணரமுடியும். இது தொண்டை வலியை போக்க உதவுகிறது. 

55

கொத்தமல்லி விதைகளையும், பெருஞ்சீரக விதைகளையும் நீரில் ஊறப் போட்டு, காலை எழுந்ததும் அந்த நீரால் கண்களை நன்கு கழுவுங்கள். இதனால் கண்கள் நலம் பெறும். கொத்தமல்லி விதைகளை ஊறவைத்த நீரை காலையில் குடித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். வாரம் இருமுறை அருந்தலாம். மாதவிடாய் வலிக்கு ஏற்றது. அதுமட்டுமா? கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த தண்ணீர் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் இருக்குமாம். 

இதையும் படிங்க: உங்க பிட்டத்தை அழகாவும், பெரிதாகவும் மாற்றும் உணவுகள் பற்றி தெரியுமா?

 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image2
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Recommended image3
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved