என் மௌனத்தை சீண்டி பார்க்காதீர்கள்...! கடுப்பான சமந்தா..? நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் தான் காரணமா..?
Samantha: நடிகை சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமந்தா நடித்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது.
Samantha
இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கோண காதலில் நடித்துள்ளனர்.
Samantha
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த படத்திற்காக ஆர்மி எல்லாம் ஆரம்பித்து விட்டனர். இதற்கு காரணம், சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்த சமந்தா இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.
Samantha
காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, சமந்தா ஜோடி சமீபத்தில் திடீரென பிரிந்தனர். இந்நிலையில், நாக சைதன்யாவுக்கு விரைவில் இன்னொரு திருமணம் நடைபெற இருக்கிறது என செய்தி பரவி வருகிறது.
Samantha
மேலும், பெண் நடிகையாக இருக்க கூடாது என நாக சைதன்யா கண்டிஷன் போட்டிருப்பதாக செய்தி வெளியானது. இருப்பினும் திருமணம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.
Samantha
அதுமட்டுமின்றி, நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து, அது முற்றிலும் வதந்தி, அது போன்ற ஒரு எண்ணம் தனக்கு இல்லை என நாக சைதன்யா அதிரடியாக கூறியுள்ளார்.
Samantha
இந்நிலையில், தற்போது சமந்தா ட்விட்டரில் கோபமான ஒரு பதிவை போட்டிருக்கிறார். என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள்.
Samantha
மேலும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில் "அன்புக்கும் expiry date இருக்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
samantha
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் தான் காரணமா..? அல்லது வேறு ஏதாவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.