தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!
உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
Salem Crime news
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள இருப்பாளி ஊராட்சி குருக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி (55). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவர் மாணிக்கம் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், பெருமாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
Women Murder
இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை பெருமாயி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெருமாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: புல் மப்பில் காவலர் குடியிருப்பில் போலீஸ் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
School Student
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பெருமாயின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்தின் அடிப்படையில் குருக்கப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் போலீசாரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுஅருந்தி விட்டு காதலனுடன் உல்லாசம்.. போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி மூச்சு திணறி பலி..!
Police Arrest
இதுகுறித்து போலீஸ் கூறுகையில்: கடந்த 12ம் தேதி பெருமாயி வீட்டில் சிறுவன் தண்ணீர் வாங்கி குடித்துள்ளான். அதன் பிறகு பெருமாயியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளான். அதற்கு பெருமாயி ஆத்திரமடைந்து சிறுவனை அடித்ததும் மட்டுமல்லாமல் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து விடுவேன் சைகையில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் பெருமாயியை கீழே தள்ளி, அவரது தலையில் கல்லை போட்டு ெகாடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.