"பணம் கேட்டு மிரட்டுறாங்க".. தமிழ் பட நடிகை மீது பரபரப்பு புகார்.. "எல்லாம் வீண் விளம்பரம்" - கடுப்பான Heroine
Producer Complaint Against Heroine : தயாரிப்பாளர் ஒருவர் பிரபல நடிகை மீது, அவர் மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக புகார் ஒன்றை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actress digangana
மும்பையில் பிறந்து ஹிந்தி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் திகங்கனா சூரியவர்ஷினி. 2018ம் ஆண்டு தான் இவர் திரைத்துறையில் அறிமுகமானார் என்ற பொழுதும் கடந்த 2002ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாகவே சீரியல்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ரியாலிட்டி ஷோக்களிலும் சின்னத்திரை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்கு இது தான் காரணமா? பவன் கல்யாணினின் முன்னாள் மனைவி சொன்ன ஷாக் தகவல்..
dhanushu rasi neyarkale
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான "தனுசு ராசி நேயர்களே" திரைப்படத்தின் மூலம் இவர் கோலிவுட் உலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் இவர் நடித்து வருகிறார், அவ்வப்போது இணைய தொடர்களிலும் நடிக்கின்றார்.
digangana
இந்த சூழலில் "ஷோ ஸ்டாப்பர்" என்கின்ற இணைய தொடரில் அவர் நடித்திருந்த நிலையில் அந்த வெப் தொடரை தயாரித்து இயக்கிய மணி சங்கர் தான் தற்பொழுது சூரியவர்ஷினி மீது புகார் அளித்திருக்கிறார். அந்த வெப் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக தான் அக்ஷய் குமாரிடம் பேசுவதாகவும், அவருக்கு 6 கோடி ரூபாயும் தனக்கு 75 லட்சம் தர வேண்டும் என்று சூரியவர்ஷினி தயாரிப்பாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
Harish kalyan movie
ஆனால் சூரியதர்ஷினி தரப்பு வாதத்தின்படி, அந்த வெப் தொடர் எடுக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவே இப்படி தன் மீது வீண் பழி அவர் சுமத்துகிறார் என்றும், இதற்காக அவர் மீது தானும் புகார் அளிக்க உள்ளதாகவும் சூரியவர்ஷினி கூறியுள்ளார். 11 பிரிவுகளின் கீழ் சூரியவர்ஷினி மீது வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.