நான் கம்போஸ் பண்ணத கேட்டா ச்சீ... த்தூனு துப்பிடுவாங்க.. மனசு கஷ்டமா இருக்கும்! இளையராஜா பற்றி கார்த்திக் ராஜா
இசைஞானி இளையாராஜாவிடம் தான் கம்போஸ் பண்ண பாடல்களை போட்டுக் காட்டினால் ச்சீ தூ என துப்பிவிடுவார் என கார்த்திக் ராஜா கூறி இருக்கிறார்.
Ilaiyaraaja son karthik raja
இசை உலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவரது பாடலைக்கு அடிமை ஆகாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு தன்னுடைய ஆத்மார்த்தமான இசை மூலம் ஒவ்வொருவர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இளையராஜா. அவரைப்போல் அவரது வாரிசுகளான கார்த்திக் ராஜா, பவதாரிணி, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் சினிமாவில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01dz0wmfynmm1bdt9qc3ghpfxc/yuvan-shankar-raja-karthik-raja-and-bhavatharini-jpg_300x300xt.jpg)
Ilaiyaraaja sons and Daughter
இளையராஜாவின் வாரிசுகளில் தந்தை அளவுக்கு பெயரையும் புகழையும் பெற்றவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரைவிட திறமைசாலியாக இருந்தும் கார்த்திக் ராஜாவால் சினிமாவில் உச்சத்தை தொட முடியவில்லை. இருப்பினும் இவர் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக 90-களில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பல்வேறு படங்களுக்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நான் என்னை இசைஞானியாக நினைக்கவில்லை... அதில் எவ்வித கர்வமும் எனக்கில்லை - இளையராஜா ஓபன் டாக்
Ilaiyaraaja Family
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னுடைய தந்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் கார்த்திக் ராஜா. அதன்படி வீட்டில் நீங்கள் அம்மா பிள்ளையா இல்லை அப்பா பிள்ளையா என தொகுப்பாளர் கேட்க. நிச்சயம் அம்மா பிள்ளை தான் என சொல்லும் கார்த்திக் ராஜா, அப்பா மீது மரியாதை இருப்பதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் வீட்டிலும் அப்பா ஒரு லெஜண்ட் தான், அவர் எங்களுடன் பேசுவதையே நாங்கள் பெருமையாக நினைப்போம் என கூறியுள்ளார்.
Ilaiyaraaja
இதையடுத்து இளையராஜாவிடம் இசை சம்பந்தமாக ஏதேனும் அட்வைஸ் கேட்டதுண்டா என தொகுப்பாளர் கேட்க, இதற்கு அவர் சொன்ன பதில் தான் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தான் கம்போஸ் பண்ணி ஏதாவது பாடலை போட்டுக்காட்டினால் ச்சீ... த்தூ என சொல்லிவிடுவாராம் இளையாராஜா, அந்த சமயத்தில் தனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்பா நம்மளை வழிநடத்தவில்லையே என்கிற ஒரு இருக்கம் தனக்குள் இருந்ததாக மனதில் வலியோடும், முகத்தில் புன்னகையோடும் அந்த பேட்டியில் கூறி இருந்தார் கார்த்திக் ராஜா.
இதையும் படியுங்கள்... கமல் தயாரிப்பு... ஸ்ருதிஹாசன் டைரக்ஷனில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! காதலர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்