படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது சௌந்தர்யா இல்லையாம்.. இந்த நடிகை தானாம்..
படையப்பா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது சௌந்தர்யா இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
padayappa
இந்தியாவின் உச்ச நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார்.
padayappa
குறிப்பாக 90களில் ரஜினி உச்சத்தில் இருந்த போது முத்து, பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்கள் 90களில் வெளியான படங்கள் தான். இன்னும் சொல்லப்போனால் 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சிவாஜி கணேசன், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தில் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருப்பார்.
padaiyappa
மேலும் இந்த படத்திற்கு பின்னரே பெண் வில்லிகளின் கேரக்டர்கள் அதிகமாக வரத்தொடங்கியது. படையப்பா படத்தில் ரஜினி – சௌந்தர்யா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஆனால் படையப்பா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது சௌந்தர்யா இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்.. உண்மை தான். முதலில் நடிகை சிம்ரனை தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் முடிவு செய்தாராம்.. ஆனால் அப்போது சிம்ரன் படுபிஸியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
பின்னர் நடிகை மீனாவை இயக்குனர் அணுகி உள்ளார். ஆனால் சில காரணங்களால் அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். பின்னர் நக்மாவிடம் தான் கதை கூறியுள்ளார். அவருக்கு கதை பிடித்து போகவே இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
padaiyappa
அதன்படி நக்மாவை வைத்து ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டதாம். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் தனக்கு இந்த படத்தில் நடிக்க போதிய ஸ்பேஸ் இருக்காது என்று கூறி நக்மா திடீரென விலகிவிட்டாராம். அதன்பின்னரே அந்த கேரக்டரில் சௌந்தர்யா நடித்தாராம்.
padaiyappa
எனினும் நக்மா படையப்பா படத்தில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படவில்லை.