விபச்சார வழக்கால் சீரழிந்த வாழ்க்கை! அந்த நடிகை போல் மாற ஆசைப்பட்ட புவனேஸ்வரி கூறிய அதிர்ச்சி தகவல்!
விபச்சார வழக்கில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரி, தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
விபச்சார வழக்கில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரி, தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01eez583s4j2za8q769madce4v/b10-jpg_300x432xt.jpg)
ஒரு சில பிரபலங்கள் மட்டுமே சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் ஒரு படத்தில் நடித்தால் கூட மனதில் பதிந்து விடுவார்கள். அந்த வகையில் ஒரு மாடலாக அறியப்பட்டு, சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் புவனேஸ்வரி.
Ajith: அஜித்தின் ஒர வஞ்சனை! பிரபலங்களுக்கு ஓடி போய் உதவி! ரசிகர்கள் - பொதுமக்களை கண்டுகொள்ளாத அவலம்!
இவருடைய கண், சிரிப்பு, ஹைட் போன்றவை மிகப் பெரிய பிளஸ் ஆக இருந்த போதிலும், ஒரு சில காரணங்களால் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபு, எஸ்.வி.சேகர், வடிவேலு, கோவை சரளா, ரோஜா, போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான 'கந்தா கடம்பா கதிர்வேலா' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை என்றாலும், அதே ஆண்டு சன் டிவியில் ராதிகா நடிப்பில் உருவான சித்தி தொடரில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அடுத்தடுத்து பல சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும்... ப்ரியமானவளே, ரிஷி போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது என்றால், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சித்தார்த் - ஜெனிலியா நடிப்பில் வெளியான... பாய்ஸ் திரைப்படம் தான்.
இந்த படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் அவரிடம் கூறிய போது.. மிகவும் தயங்கியதாகவும் பின்னர் 4 ஆண்களுடன் நீங்கள் நடித்தாலும் உங்கள் மீது அவர்கள் விரல் கூட படாது என கூறிய பின்னர் தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த பேட்டியில் கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் கூறியது போலவே இப்படம் தனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது மட்டும் இன்றி பல படங்களில் வாய்ப்பையும் பெற்று கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த புவனேஸ்வரி கடைசியாக சந்திரலேகா சீரியலில் நடித்திருந்தார். தற்போது முழுக்க முழுக்க... தெலுங்கு திரைப்படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து... சமீபத்திய பேட்டியில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரிக்கு சரோஜா தேவி என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே திரையுலகில் அவரை போலவே தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என நினைத்தாராம். பல படங்கள் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கும் போது... அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதனால் சிலர் சதி செய்து, இவரை விபச்சார வழக்கில் சிக்க வைத்தனர்.
இதனை பொய் என நிரூபித்து, இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனார். தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வரும் புவனேஸ்வரி நூற்றுக்கும் மேற்பட்ட... ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.