பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா! தீயில் இறங்கிய உள்துறை செயலாளர் அமுதா! அதிர்ந்துபோன பக்தர்கள்! போட்டோஸ் வைரல்!
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Erode Bannari Mariamman Festival
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
Bannari Mariamman Festival
இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 11ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 12ம் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று. மார்ச் 19ம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது.
amudha
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர். சரியாக 3.50 மணிக்கு பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Amudha
இந்நிலையில் தனது சுறுசுறுப்பால் அனைவரது கவனத்தை ஈர்த்து வரும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
Home Secretary Amudha
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தால் பல்வேறு கோயில் திருவிழாவில் கலந்து கொள்வார் அந்த வகையில் பண்ணாரி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டவர், திடீரென குண்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது மட்டுமல்லாமல் போட்டோஸ் வைரலாகி வருகிறது.