பிரபல கிரிக்கெட் வீரர் மீது காதல்.. பாடகர் மீது க்ரஷ்.. ஆனா அவர் ஒரு Gay.. நடிகை ஜெயசுதா சொன்ன சீக்ரெட்ஸ்..
சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஜெயசுதா தனது திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் குறித்து ஜெயசுதா பகிர்ந்து கொண்டார்.
பழம்பெரும் நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். 70, 80களில் உச்சத்தில் இருந்த பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இயற்கையான நடிகை என்று அழைக்கப்படும் நடிகை ஜெயசுதா, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hr3yv7jccd8tr2qg4refgtka/screenshot-2024-03-04-104800-png_300x192xt.jpg)
ஸ்டார் ஹீரோக்களின் அம்மா, அத்தை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் தமிழில் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்தார். ஜெயசுதா ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது கணவர் நிதின் கபூர் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் ஜெயசுதா வேறு ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவலை மறுத்த ஜெயசுதா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருவதாக கூறினார்.
Jayasudha
சமீபத்தில் பேட்டியளித்த ஜெயசுதா தனது திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் குறித்து ஜெயசுதா பகிர்ந்து கொண்டார். தான் ஹீரோனாயினாக இருந்த ஆரம்ப காலத்தில் எந்த ஹீரோவின் மீதும் காதல் இருந்ததா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
Jayasudha
இதுகுறித்து பேசிய அவர் “ நான் ஹீரோயினாக இருந்த ஆரம்ப காலத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது எனக்கு ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால் அது காதலா அல்லது வெறும் ஈர்ப்பா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது க்ரஷ் இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பல நாட்கள் கனவு கண்டேன். ஆனால் அந்த ஈர்ப்பு திருமணம் வரை செல்லாது என்று எனக்கு தெரியும்.” என்று தெரிவித்தார்.
மேலும் நடிகை ஜெயசுதா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அந்த பேட்டியில் பேசிய அவர், “நான் ஒரு பாடகரையும் காதலித்தேன், இம்ரான் கான் போல் அவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் சில வருடங்களில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்து கொண்டேன்.. பிறகு நான் அதை செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். எனக்கு இனி எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார்.