என்னது வசிய மருந்தா? ஜீனத் தவிர மேலும் பல பெண்கள்.. ராஜ்கிரண் சொன்ன ஷாக் தகவல்..
மகள் ஜீனத் பிரியா விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் ராஜ் கிரண். 90களில் என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர்.
பின்னர் 2000-களில் குணச்சித்திர வேடங்கள் நடிக்க தொடங்கிய ராஜ்கிரண், நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்தார். அவர் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவுக்கு சீரியல் நடிகர் முனீஷ் ராஜாவுக்கு பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டது. ஆனால் தங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஜீனத் கடந்த 2022-ம் ஆண்டு முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவகாரம் அப்போது பெரிதாக பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய ராஜ்கிரண் ஜீனத் பிரியா தனது வளர்ப்பு மகள் என்ற உண்மையை வெளிப்படுத்தினார். மேலும் பணக்கார பெண்களை காதலித்து ஏமாற்றுவது தான் முனீஷ் ராஜாவின் வேலை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜீனத் பிரியா, தனது கணவரை பிரிந்துவிட்டதாகக கூறினார். மேலும் தங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்று கூறிய அவர், தனது தந்தை ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து முனீஷ் ராஜாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர் “ என் மனைவி தானாக பிரியவில்லை. வேண்டுமென்ற என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டார். இந்த பிரிவுக்கு ராஜ்கிரண தான் காரணம் என்று மறைமுகமாக கூறினார். மேலும் தங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது மகள் குறித்து ராஜ் கிரண தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் “ பணக்கார பெண்களை குறிவைத்து ஏமாற்றுவது தான் முனீஷ் ராஜாவின் வேலை. இதற்காக கொல்லி மலையிலிருந்து வசிய மருந்துகளை வரவழைத்து அதை பெண்களுக்கு கொடுத்து அவர் ஏமாற்றி வருகிறார். இதுவரை 7 – 8 பெண்களை முனீஷ் ராஜா வசியப்படுத்தி ஏமாற்றி உள்ளார். அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இதுதான் வேலை. இதெல்லாம் தெரியாமல் எனது மகள் ஜீனத் அவரிடம் மாட்டிக்கொண்டார்.
எனது மகள் முனீஷ் ராஜாவை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. தற்போது நான் தான் தனியாக வீடு ஒன்றை எடுத்து அவரை தங்க வைத்து பார்த்துக் கொள்கிறேன். முனீஷ் ராஞாவும் அவரின் குடும்பமும் சேர்ந்து எனது மகள் ஜீனத்தை துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். முனீஷ் ராஜா என் மகளை வாழ வேண்டும் என்று அழைத்து செல்லவில்லை. பணத்திற்காக மட்டுமே அழைத்து சென்றுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜீனத், முனீஷ் ராஜா தன்னை தினமும் குடித்து விட்டு அடிப்பார் என்றும், பணம் கேட்டு தொந்தரவு செய்வார் என்றும் கூறியிருந்தார். மேலும் தன்னை விட்டு பிரிந்தால் தனது குடும்பத்தையே வெட்டுவேன் என்று பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.