அன்று ஸ்கூல் ஃபீஸ் கட்டவே திணறிய உச்ச நடிகர்.. இன்று ரூ.1800 கோடி சொத்து மதிப்பு.. ரூ.60 கோடியில் வீடு..
பாலிவுட்டில் குழந்தை நடிகராக அறிமுகமான இந்த நடிகர் தற்போது முதல் 2000 கோடி படத்தை கொடுத்த சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.
வாழ்கையில் வெற்றியும் புகழும் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. அதற்கு சினிமா துறை மட்டும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இன்று உச்ச நடிகராக இருக்கும் ஒருவர் தனது சிறுவயதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டார். இருப்பினும், தனது கடின உழைப்பால், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது மட்டுமல்லாமல், தற்போது ஆடம்பர வாழ்க்கையையும் வாழ்ந்து வருகிறார்.. பாலிவுட்டில் குழந்தை நடிகராக அறிமுகமான இந்த நடிகர் தற்போது முதல் 2000 கோடி படத்தை கொடுத்த சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார். ஆம், அவர் வேறு யாருமல்ல, அமீர்கான்தான்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தாஹிர் உசேனின் மகன் அமீர் கான். தற்போது பாலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆமீர் கான். தனது தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஆமீர் கான். லகான், ஃபனா, ரங் தே பசந்தி, தாரே ஸமீன்பர், 3 இடியட்ஸ், பி.கே, தங்கல் என மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களை ஆமீர்கான் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ஆமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் தோல்வியை சந்தித்தாலும், அவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.175 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது சித்தாரே ஸமீன் பர் படத்தில் ஆமீர்கான் நடித்து வருகிறார்.
தனது தந்தை தயாரிப்பாளராக இருந்தும், சிறு வயதில் பொருளாதார ரீதியில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறினார். இதுகுறித்து ஒரு முறை பேட்டியளித்த அவர் , " எனது தந்தையின் படங்கள் நன்றாக ஓடினாலும், அவரிடம் பணம் இல்லை, அவர் எப்போதும் கடன் வாங்கிக்கொண்டே இருந்தார், அந்த நேரத்தில் அவர் 36% வட்டி விகிதத்தில் கடன் வாங்கினார்.
எங்கள் வாழ்வில் 8 வருட காலம் மிகவும் மோசமானது. அவர் தயாரித்த படம் 8 வருடங்கள் தாமதமானது. நாங்கள் அனைத்தையும் இழந்து சாலைகளில் இருந்தோம். அப்போது எனக்கு 10 வயது இருக்கும்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆமீர் கான் தனது தனித்துவமான பள்ளிக் கட்டணம் குறித்து பேசினார். அதாவது. 2 ஆம் வகுப்புக்கு ரூ 2, 6 ஆம் வகுப்புக்கு ரூ 6 என்று பள்ளிக்கட்டணம் இருக்கும். அப்போது அதிகபட்ச கட்டணம் ரூ. 10, ஆனால், எனது முழு பள்ளி வாழ்க்கையிலும், ஒரு வருடம் கூட சரியான நேரத்தில் பள்ளி கட்டணம் செலுத்தியதில்லை. சரியான நேரத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாத நபர்களை பள்ளி முதல்வர் அசெம்பிளியில் பெயர் சொல்லி அழைப்பார்.” என்று கூறினார்.
சிறுவயதில் கஷ்டப்பட்டாலும், ஆமீர் கான் தற்போது ஒரு நாட்டின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் அவர் கஜினி, தங்கல், பிகே, சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தூம் 3 மற்றும் பல பிளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.
தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழும் அவர், மும்பையில் கடலை பார்க்கும் வகையில் ஒரு வீட்டிஐ வைத்திருக்கிறார், அதன் மதிப்பு ரூ.60 கோடி. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ள இவர் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு 1800 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.