MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?

பொதட்டூர்பேட்டையில், அரசு ஊழியரான கணேசன் என்பவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்சூரன்ஸ் பணம் மற்றும் அரசு வேலைக்காக அவரது இரு மகன்களே நண்பர்களுடன் சேர்ந்து கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை.

1 Min read
vinoth kumar
Published : Dec 20 2025, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்த கணேசன்
Image Credit : Asianet News

பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்த கணேசன்

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்துள்ளார்.

24
காப்பீட்டு நிறுவனம் புகார்
Image Credit : our own

காப்பீட்டு நிறுவனம் புகார்

இந்நிலையில் கடந்த அக்டோபர் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கணேசன் குடும்பத்தினர் மீது சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. இதையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related Articles

Related image1
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?
Related image2
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
34
பாம்பை கடிக்க வைத்து கொலை
Image Credit : getty, twitter

பாம்பை கடிக்க வைத்து கொலை

அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்றது தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28) தினகரன் (28) ஆகியோருடன் உதவியது தெரியவந்தது.

44
 தந்தையை கொலை மகன்கள்
Image Credit : Asianet News

தந்தையை கொலை மகன்கள்

அதாவது கணேசனின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் உள்ளிட்ட 6 பேரையம் போலீசார் கைது செய்தனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து பெற்ற மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
Recommended image2
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
Recommended image3
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..
Related Stories
Recommended image1
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?
Recommended image2
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved