MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்: அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?

சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்: அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?

நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 இலட்சம் வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

1 Min read
Suresh Manthiram
Published : May 26 2025, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற அரிய வாய்ப்பு!
Image Credit : Gemini

சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற அரிய வாய்ப்பு!

திருநெல்வேலி மாவட்டம், நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் வழங்கப்படவுள்ளது. இதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழு (Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது.

24
தனிநபர் மற்றும் குழுக்களுக்கான கடன் திட்டங்கள்!
Image Credit : Gemini

தனிநபர் மற்றும் குழுக்களுக்கான கடன் திட்டங்கள்!

சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தனிநபர் தொழில் கடன் (SEP-I) பெற 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.4.00 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். குழு தொழில் கடன் (SEP-G) பெற, 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளில் 2 முதல் 5 நபர்கள் கொண்ட தொழில் குழுக்களுக்கு ரூ.20.00 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

Related image1
சுய தொழில் தொடங்க விருப்பமா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்...
Related image2
30 வயதில் தொழில் மாற்றம்: வெற்றிகரமான வழிகாட்டி
34
விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
Image Credit : Gemini

விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

தகுதியுள்ள நகர்ப்புற ஏழை/சுய உதவிக்குழு உறுப்பினர்கள்/குழுக்கள், தனிநபர் கடன்/குழுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பப் படிவத்தை [https://tirunelveli.nic.in] என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

44
சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்
Image Credit : AI Generated Photo

சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved