MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 10 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.58,600 சம்பளத்தில் திருக்கோயிலில் அரசு வேலை! எழுத்துத் தேர்வு இல்லை..

10 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.58,600 சம்பளத்தில் திருக்கோயிலில் அரசு வேலை! எழுத்துத் தேர்வு இல்லை..

தமிழ்நாடு அரசு அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தேர்வு இல்லை. ஜூன் 30, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

2 Min read
Suresh Manthiram
Published : Jun 17 2025, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அருள்பமிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் அரசு வேலை!
Image Credit : google

அருள்பமிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது அரசு வேலை தேடும் பலருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

25
பதவி விவரங்கள்: கல்வித்தகுதி மற்றும் காலியிடங்கள்!
Image Credit : annamalaiyar temple instagram

பதவி விவரங்கள்: கல்வித்தகுதி மற்றும் காலியிடங்கள்!

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், சீட்டு விற்பனையாளர், காவலர், கூர்க்கா, ஏவலர், சலவைத் தொழிலாளர், திருவலகு, பெருக்குபவர், உப கோயில் எழுத்தர், ஓதுவார், உப கோயில் மேலக்குழு போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பெரும்பாலான பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், சில பதவிகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் அடிப்படைத் தகுதியாகும். ஓதுவார் மற்றும் உப கோயில் மேலக்குழு போன்ற சில பதவிகளுக்கு சமய நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் தேவை. மொத்தம் 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
10-வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.55,900 சம்பளம்: மத்திய அரசு வேலை! உடனே விண்ணபிக்கவும்!
Related image2
SSC Recruitment 2025: மத்திய அரசு வேலைவாய்ப்பு, 40 துறைகளில் 14,582 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!
35
சம்பள விவரம்: கவர்ச்சிகரமான ஊதியம்!
Image Credit : Google

சம்பள விவரம்: கவர்ச்சிகரமான ஊதியம்!

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். சீட்டு விற்பனையாளர் பதவிக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும், காவலர், கூர்க்கா, திருவலகு போன்ற பதவிகளுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும், ஏவலர், பெருக்குபவர் பதவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.50,400 வரையும், சலவைத் தொழிலாளர் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரையும், உப கோயில் எழுத்தர், உப கோயில் மேலக்குழு பதவிகளுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையும், ஓதுவார் பதவிக்கு ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

45
வயது வரம்பு மற்றும் தேர்வு முறை: நேர்காணல் மட்டுமே!
Image Credit : Asianet News

வயது வரம்பு மற்றும் தேர்வு முறை: நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. மிக முக்கியமாக, இந்த பணிகளுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது. நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது போட்டித் தேர்வுகள் இல்லாமல் அரசு வேலை பெற ஒரு அரிய வாய்ப்பாகும்.

55
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்!
Image Credit : Google

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்!

விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஜூன் 15, 2025 ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2025. தகுதியுடைய நபர்கள் கடைசி தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில்,

தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல்,

மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்து நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved